வாஷிங்டன்; அமெரிக்காவின் வலதுசாரி ஆர்வலரும், அதிபர் டிரம்ப்பின் தீவிர ஆதரவாளருமான 31 வயதான சார்லி கிர்க், உட்டா பல்கலைக்கழக நிகழ்ச்சியில் மாணவர்களுடன் உட்கார்ந்து கலந்துரையாடிக்கொண்டிருந்தபோது  மர்ம நபரால் சுட்டு கொல்லப்பட்டார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  இதற்கு அதிபர் டிரம்ப் இரங்கல் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் ஆதரவாளரான சார்லி கிர்க், பல்கலைக்கழக நிகழ்ச்சியின் போது சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது. குற்றவாளியை தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அமெரிக்காவில் துப்பாக்கி கலாச்சாரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அங்கு மாணவர்களிடையே ஏற்படும் மோதலின்போதுகூட துப்பாக்கியால் சுட்டு கொல்லப்படுவது வாடிக்கையாக உள்ளது. இந்த நிலையில்,  அமெரிக்காவின் வலதுசாரி ஆர்வலரும், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் தீவிர ஆதரவாளருமான சார்லி கிர்க் என்பவர், அங்குள்ள  உட்டா பல்கலைக்கழகத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் மாணவர்களுடன் பேசிக் கொண்டிருந்தபோது  மர்ம நபரால் சுட்டுக் கொல்லப்பட்டார். அவரது கழுத்தில் குண்டு பாய்ந்தது. இதையடுத்து அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

உடனடியாக சார்லி கிர்க், காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது. இருப்பினும், சிகிச்சை பலனின்றி கிர்க் பலியானார்.

சமீபகாலமாகவே அமெரிக்காவில் தொடர்ந்து வன்முறை அதிகரித்து வரும் நிலையில், ‘டர்னிங் பாயிண்ட் யுஎஸ்ஏ’ என்ற இளைஞர் அமைப்பின் இணை நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியான சார்லி கிர்க் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடர்பான வீடியோவில்,   நேற்றைய தினம் (September 10, 20) 5 உட்டா பல்கலைக்கழக நிகழ்ச்சியில் சார்லி கிர்க் உட்கார்ந்து மாணவர்களுடன் உரையாடுவதும், அப்போது அடையாளம் தெரியாத ஒருவர் அவரை அவரது கழுத்தில் சுட்டுக் கொல்வதும் விடியோவில் பதிவாகியுள்ளது.  இந்த விடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது. அவரை சுட்டுக் கொன்றவர் யார்? எதற்காக சுட்டார் என்பது குறித்த தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

மேலும், ஸ்வாட் பிரிவு காவல் துறையினர் சுட்டுக் கொன்றவர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். சுட்டுக்கொல்லப்பட்ட சார்லி கிர்க்கிற்கு எரிக்கா என்ற மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.

சார்லி கிர்க்கின் மரணத்தை உறுதிபடுத்திய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தன்னுடைய ட்ரூத் சோஷியல் பக்கத்தில் பதிவு ஒன்றையும் பகிர்ந்துள்ளார். அந்தப் பதிவில், “தி கிரேட் புகழ்பெற்ற சார்லி கிர்க் மரணமடைந்துவிட்டார். அமெரிக்காவில் உள்ள இளைஞர்களின் மனதை சார்லியைவிட யாரும் புரிந்துகொண்டது இல்லை. அவர் அனைவராலும் நேசிக்கப்பட்டார், புகழப்பட்டார்; ஆனால், அவர் தற்போது நம்மிடம் இல்லை. சார்லியின் மறைவுக்கு அவரது மனைவி எரிக்காவுக்கு என்னுடைய மனைவி மெலனியா மற்றும் என்னுடைய சார்பில் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். நாங்களை உன்னை நேசிக்கிறோம் சார்லி!” எனப் பதிவிட்டுள்ளார் .