பாலக்காடு எம்எல்ஏ ராகுல் மம்கூத்ததில் மீது சமூக ஊடகங்கள் மூலம் பெண்களைப் பின்தொடர்ந்து துன்புறுத்தியதாகவும், இதனால் அவர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியதாகவும் கேரள குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

எழுத்தாளர் ஹனி பாஸ்கரன், மலையாள நடிகரும் முன்னாள் பத்திரிகையாளருமான ரினி ஆன் ஜார்ஜ் உள்ளிட்ட பல பெண்களிடம் ஆபாசமாக நடந்து கொண்டதாக குற்றம் சாட்டப்பட்டது.

இதைத் தொடர்ந்து இளைஞர் காங்கிரஸின் மாநிலத் தலைவர் பதவியில் இருந்து மம்கூத்ததில் ராஜினாமா செய்தார்.

பின்னர், ஆகஸ்ட் 25 ஆம் தேதி கேரள காங்கிரஸின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்து ராகுல் மம்கூத்ததில் இடைநீக்கம் செய்யப்பட்டார்.

இந்நிலையில் அவர் மீது பிஎன்எஸ் பிரிவுகள் 78(2) மற்றும் 351 மற்றும் கேரள காவல் சட்டம் 120(0) ஆகியவற்றின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.