வாஷிங்டன்: இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் விதித்துள்ள 50% வரி உயர்வு நாளைமுதல் அமலாகிறது. இதுதொடர்பாக அமெரிக்கா நோட்டீஸ் வெளியிட்டுள்ளது.
இதையடுத்து, இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் வைரம், ஜவுளி மற்றும் கடல் உணவுப்பொருட்கள் உள்பட பல பொருட்களை ஏற்றுமதி செய்வதில் நிறுவனங்கள் தீவிரமாக செயலாற்றி வருகின்றன. இந்திய நேரப்படி நாளை காலை 9.31 வரை ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு வரி விலக்கு அளிக்கப்படும் என கூறப்பட்டுள்ள நிலையில், இந்திய வணிகர்கள் பொருட்களை ஏற்றுமதி செய்வதில் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு நாளை (ஆக.27) முதல் 50% வரி உயர்த்தப்பட்டு உள்ளது என்பதை தெரிவித்துள்ள அமெரிக்காவின் விளக்க நோட்டிசில், இது நுகர்வுக்காக அல்லது பண்டக சாலைக்கு அனுப்பப்படும் இந்தியப் பொருட்கள் மீதான வரி என்றும், ரஷ்யாவால் அமெரிக்காவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் காரணமாகவே கூடுதல் வரி போடப்பட்டு இருப்பதாகவும் விளக்கம் கூறியுள்ளது.
அமெரிக்காவுக்கு இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு கூடுதலாக 25 சதவிகித வரிகள் முதல் உச்சபட்சமாக 50 சதவிகிதம் வரை வரி விதித்து அமெரிக்கா அதிகாரபூர்வமாக பொது அறிவிப்பை வெளியிட்டுள்ளது. புதிய வரிவிதிப்பு நாளை(ஆக.27) 12.01 முதல் அமலுக்கு வரும் என்றும் தெரிவித்துள்ளது.
உக்ரைனுடன் போரில் ஈடுபடும் ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதாக குற்றஞ்சாட்டி இந்திய பொருள்கள் மீது ஏற்கெனவே விதித்த 25 சதவீத வரியுடன் கூடுதலாக 25 சதவீத வரியை அமெரிக்கா அண்மையில் அறிவித்திருந்தது. இந்தியாவுக்கான 40 சதவிகிதத்துக்கும் அதிகமான கச்சா எண்ணெய் தேவை ரஷியாவிடம் இருந்து பெறப்படும் நிலையில், இது இந்தியாவுக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தும் என அஞ்சப்படுகிறது. இதனால், சுதேஷி பொருட்களை வாங்க பொதுமக்களை பிரதமர் மோடி வலியுறுத்திவ ருகிறார்.
இதற்கிடையில், அமெரிக்கலா உயர்த்தி உள்ள இந்த வரிவிதிப்பு நாளை (ஆகஸ்ட் 27ஆம் தேதி) முதல் அமலுக்கு வரும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்திருந் தார். அமெரிக்காவின் இந்த வரி உயர்வு இந்திய வர்த்தகத்தை கடுமையாக பாதிக்கும் என அஞ்சப்படுகிறது.
இதுதொடர்பா,க அமெரிக்க சுங்கம் மற்றும் எல்லைப் பாதுகாப்பு மூலம் உள்நாட்டுப் பாதுகாப்புத் துறையால் வெளியிடப்பட்டுள்ள அந்த அறிவிப்பில், ஆகஸ்ட் 6 ஆம் தேதி கையொப்பமிடப்பட்ட அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் உத்தரவு எண்: 14329-ல் வரிகள் உயர்த்துவதை உறுதிப்படுத்தியுள்ளது.
மேலும், அமெரிக்க அதிபர் கூறியிருந்த காலக்கெடுவான ஆகஸ்ட் 27 ஆம் தேதிக்குப் பின்னர், கிடங்குகளில் இருக்கும் அனைத்துப் பொருள்களுக்கு இறக்குமதி வரி விதிக்கப்படும் என அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். அதன்படி நாளை காலை 9.39க்கு பிறகு இந்திய பொருட்களின் மீதான வரி கடுமையாக உயர்த்தப்பட உள்ளது.
அமெரிக்காவுடன் ஒப்பந்தம் செய்துகொள்ளத் தவறினால், ரஷியாவுடன் வர்த்தகம் செய்யும் நாடுகள் மீது கூடுதல் வரிகள் விதிக்கப்படலாம். எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என்றால், வரும் வாரங்களில் மிகப் பெரிய விளைவுகள் ஏற்படும் என்று அவர் எச்சரித்துள்ளார். இருப்பினும், ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெயை வாங்கும் சீனா உள்பட பிற முக்கிய நாடுகள் மீது அமெரிக்கா நடவடிக்கை எடுப்பதை தவிர்த்து வருவது குறிப்பிடத்தக்கது.