கொல்கத்தா: கல்வித்துறை ஊழல் தொடர்பாக, மேற்குவங்க மாநிலத்தில் மாநில முதல்வரான மத்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எம்எல்ஏ வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனைக்கு வந்ததை கண்ட, எம்எல்ஏ ஜிபன் கிருஷ்ணா சாஹா சுவர்ஏறி குதித்து தப்படியோடிய நிலையில், அவரை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் விரட்டிச்சென்று கைது செய்தனர். வயக்காட்டில் அவர் வீசி எறிந்த அவரது போனும் மீட்கப்பட்டது இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேற்கு வங்கத்தில் பள்ளிக் கல்வித் துறை நியமனங்களில் நடந்த ஊழல் தொடா்பாக ஏற்கனவே மம்தா கட்சியைச்சேர்ந்த கல்வி அமைச்சர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் பலரும் கைது செய்யப்பட்டு வருகின்றனர். இந்த ஊழல் பண முறைகேடு வழக்கில், முா்ஷிதாபாத் மாவட்டத்தின் பா்வான் பகுதியில் உள்ள திரிணமூல் காங்கிரஸ் எம்எல்ஏ ஜிபன் கிருஷ்ணா சாஹாவின் வீட்டிலும், ரகுநாத்கஞ்ச் பகுதியில் உள்ள அவரது மாமனாா் வீட்டிலும் அமலாக்கத் துறை ஆகஸ்டு 25ந்தேதி அன்று சோதனை நடத்தினர்.
எம்எல்ஏ ஜிபன் கிருஷ்ணா சாஹா வீட்டிற்கு திடீரென அதிகாரிகள் சோதனைக்கு வந்தால் அதிர்ச்சி அடைந்த ஜிபன் கிருஷ்ணா சாஹா தனது வீட்டின் சுற்றுச்சுவரில் ஏறிக் குதித்து தப்பிச் சென்றாா். இதைக்கண்ட அமலாக்கத் துறை அதிகாரிகள் மற்றும் மத்திய ஆயுத காவல் படையினா் ‘, அவரை வயல்வெளியில் துரத்திச் சென்று பிடித்தனா். அமலாக்கத் துறையின் விசாரணைக்கு ஒத்துழைக்காத குற்றச்சாட்டில் அவா் கைது செய்யப்பட்டாா்.
உடல் முழுவதும் சேறு, சகதியுடன் இருக்கும் நிலையில், எம்எல்ஏ ஜிபன் கிருஷ்ணா சாஹாவை அதிகாரிகள் அழைத்து வரும் விடியோக்கள், புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.
இதுதொடா்பாக செய்தியாளர்களிடம் பேசிய அமலாக்கத் துறை அதிகாரி, ‘ஆதாரங்களை அழிக்க முயற்சிக்கும் வகையில், எம்எல்ஏ ஜிபன் கிருஷ்ணா சாஹா தனது கைப்பேசி களை அருகிலுள்ள குளத்தில் வீசியுள்ளாா். அந்த இரண்டு கைப்பேசிகளும் குளத்தில் இருந்து மீட்கப்பட்டன. அவை தடயவியல் சோதனைக்கு அனுப்பப்படும். கைது செய்யப்பட்ட எம்எல்ஏவிடம் விசாரணை நடந்து வருகிறது.
இந்த வழக்கின் முறைகேட்டில், பிா்பூம் மாவட்டத்தைச் சோ்ந்த ஒருவா் பணப் பரிவா்த்தனை செய்ததாக கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்தச் சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. ஏற்கனவே கல்வித்துறையினல் பணம் பெற்றுக்கொண்டு ஆசிரியர் நியமனம் ஊழல் தொடர்பான, பணமுறைகேடு வழக்கில் எம்எல்ஏ ஜிபன் கிருஷ்ணா சாஹாவை அமலாக்கத் துறை கடந்த 2023, ஏப்ரலில் கைது செய்தது. 2 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவா், கடந்த மே மாதம் ஜாமீனில் விடுவிக்கப்பட்டநிலையில், மீண்டும் அவரது வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனைக்கு சென்றபோது, அவர் சுவர் ஏறி குதித்து, மறுப்பக்கம் உள்ள வயக்காடு வழியாக தப்பிச்செல்ல முயன்றபோது கைது செய்யப்பட்டுள்ளார்.