டெல்லி: தேர்தல் ஆணையம் பாரபட்சமின்றி செயல்படுகிறது – அரசியல் கட்சியினர் மக்களை திசை திருப்ப முயற்சி செய்கிறார்கள் என பீகார் தீவிர தேர்தல் சீர்திருத்தம் மற்றும் எதிர்க்கட்சிகிளின் குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளித்து இந்திய தேர்தல் ஆணையர்கள் பதில் அளித்துள்ளனர்.
ஏற்கனவே வாக்காளர் மோசடி குற்றச்சாட்டுகள் குறித்து ராகுல் காந்திக்கு CEC ஆதாரங்களை சமர்ப்பிக்கவும் அல்லது கருத்துக்களை திரும்பப் பெறவும் என கூறிய நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய தலைமை தேர்தல் ஆணையர், வாக்குதிருட்டு என எதிர்க்கட்சிகள் பொய்களை கூறி மக்களை திசைதிருப்புவதாகவும் குற்றம் சாட்டி உள்ளார்.

டெல்லியில் நடைபெற்ற தேர்தல் ஆணையர்களின் செய்தியாளர்களின் சந்திப்பின்போது செய்தியாளர்களிடம் பேசிய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் , தேர்தல் ஆணையம் பாரபட்சமின்றி நடக்கிறது; அனைத்துக் கட்சிகளையும் தேர்தல் ஆணையம் சரிசமமாக நடத்துகிறது என்றவர், வாக்குகள் திருடப்படுகின்றன என தவறான சொற்களை பயன்படுத்தி மக்களை திசை திருப்ப முயற்சி செய்கிறார்கள் என்று குற்றம் சாட்டினார்.
மேலும், தேர்தல் தனது அரசியல் சாசன கடமையில் இருந்து, யாருக்காகவும் பின்வாங்காது என்று ஆணித்தரமாக கூறியதுடன், வாக்கு திருட்டு குற்றச்சாட்டுகள் அரசமைப்புக்கு அவமதிப்பை ஏற்படுத்துகின்றன என்றார். வாக்கு திருட்டு போன்ற வார்த்தை பிரயோகம் அரசியலமைப்புக்கு அவமரியாதை என்றவர், வாக்குத் திருட்டு உள்ளிட்ட புகார்களை கண்டு தேர்தல் ஆணையம் அஞ்சாது என்றவர், சிலர் பொய்களையும் மக்களிடையே அச்சத்தையும் விதைக்க முயற்சிக்கின்றனர்.
சில வாக்காளர்கள் இருமுறை வாக்களித்ததாக குற்றஞ்சாட்டி வருகின்றனர். ஆனால், நாங்கள் ஆதாரம் கேட்கும்போது பதில் இல்லை; இந்திய வாக்காளர்கள் மற்றும் தேர்தல் ஆணையத்தை குறிவைத்து அரசியல் செய்ய முயற்சி செய்கிறார் என்றும் குற்றம் சாட்டினார்.
இந்த ஆண்டு இறுதியில் பீகார் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில், அங்குள்ள போலி வாக்காளர்களை அகற்றும் நடவடிக்கையை தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது. அதன்தொடர்ச்சியாக, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தின் (SIR) மூலம் 65 லட்சம் வாக்காளர்கள் நீக்ககியது. இதில் பலர் உயிருடன் இருக்கும்போதே இறந்ததாக பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாகவும், பீகார் மாநில தற்போதைய துணை முதல்வரின் பெயர் இரு இடங்களில் இடம்பெற்றுள்ளதாகவும், முன்னாள் துணைமுதல்வர் தேஜஸ்வி யாதவ் பெயர் 3 இடங்களிலும் இடம்பெற்றுள்ளதும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இதை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி உள்பட பல கட்சியில் அரசியலாக்கி வருகின்றன.
இந்த நிலையில் ஆகஸ்டு 17ந்தேதி அன்று பிற்பகலில் டெல்லியில் செய்தியாளர் சந்திப்புக்கு தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்திருந்தது. அதன்படி தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, “எங்கள் கடமைகளில் இருந்து ஒருபோதும் தவறமாட்டோம். அரசியல் கட்சிகளுக்கு இடையே நாங்கள் எந்த பாரபட்சமும் பார்ப்பதில்லை. ஒட்டுமொத்த தேர்தல் சீர்திருத்தத்தின் ஒரு பகுதி தான் SIR நடவடிக்கை. பீகாரின் SIR நடவடிக்கையில் அனைத்து அரசியல் கட்சிகளின் பங்குள்ளது.
இந்த விவகாரத்தில் போலியான, உண்மைக்கு புறம்பான தகவல்கள் பரப்பப்டுகின்றன. ராகுல் காந்தியின் குற்றச்சாட்டு இந்திய அரசியலமைப்பை அவமதிப்பதாகும். வாக்கு திருட்டு போன்ற வார்த்தை பிரயோகம் அரசியலமைப்புக்கு அவமரியாதை. எதிர்க்கட்சிகளின் வாக்கு திருட்டு குற்றச்சாட்டுகளை நிராகரிக்கிறோம். எதிர்க்கட்சிகள் தங்கள் புகாரை தெளிவாக வரையறுத்துக் கூற வேண்டும்” என்று தெரிவித்தார்.
“இந்திய அரசமைப்பின்படி, இந்தியாவின் ஒவ்வொரு குடிமகனும் 18 வயது பூர்த்தியானபின், ஒரு வாக்காளராக மாறுவதுடன் கட்டாயம் வாக்கு செலுத்தவும் வேண்டும். சட்டத்தின்படி, ஒவ்வொரு அரசியல் கட்சியும் தேர்தல் ஆணையத்திடம் பதிவு செய்யப்படுவதன் மூலமே அங்கீகரிக்கப்படுகிறது. அப்படியிருக்கும்போது, தேர்தல் ஆணையம் இதே அரசியல் கட்சிகளிடம் எப்படிப் பாகுபாடு காட்ட இயலும்? பாரபட்சத்துடன் செயல்பட முடியும்?
தேர்தல் ஆணையத்தைப் பொருத்தவரையில், அனைவரும் சமமே. யார் எந்த அரசியல் கட்சியைச் சேர்ந்தவராயினும் தேர்தல் ஆணையத்துக்கு அதுவொரு பொருட்டல்ல. தேர்தல் ஆணையம் தமது அரசமைப்பு கடமையிலிருந்து பின்வாங்காது” என்றார்.

பீகார் சர்சைகள் குறித்த பேசிய தேர்தல் ஆணையர், “தேர்தல் ஆணையத்தின் கதவுகள் ஒவ்வொருவருக்காகவும் எப்போதும் சமமாகவே திறக்கப்பட்டு இருக்கிறது. அடிமட்ட அளவில், அனைத்து வாக்காளர்களும், அனைத்து அரசியல் கட்சிகளும், அனைத்து பூத் அளவிலான அலுவலர்களும், அதிகாரிகளும், ஒருங்கிணைந்து பணியாற்று கின்றனர். வெளிப்படையான முறையில் பணியாற்றி வருகிறோம். இந்தநிலையில், எங்களால் சரிபார்க்கப்பட்ட ஆவணங்கள் தங்களின் சொந்த அரசியல் கட்சிகளின் மாநில அளவிலான தேசிய அளவிலான தலைவர்களைச் சென்றடைவதில்லை என்பது மிக தீவிரமாகக் கருத்திற்கொள்ள வேண்டிய விஷயம். களத்தில் என்ன நடக்கிறது என்பதை புறந்தள்ளிவிட்டு குழப்பத்தை பரப்ப ஒரு முயற்சி இங்கு நடைபெறுகிறது.
பிகாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சீர்திருத்த நடவடிக்கையை முழு அளவில் வெற்றியடையச் செய்ய நாங்கள் கடுமையாக உழைக்கிறோம். பீகாரில் உள்ள 7 கோடிக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் தேர்தல் ஆணையத்துடன் துணை நிற்கும்போது, தேர்தல் ஆணையத்தின் நம்பகத்தன்மை மீது எந்தவொரு கேள்விக்குறிக்கும் இடமில்லை; அதேபோல, வாக்காளர்களின் மீதான நம்பகத்தன்மை மீதும் சந்தேகத்திற்கு இடமில்லை”.
“பூத் அளவிலான முகவர்கள்(பிஎல்ஏ) 1.60 லட்சம் பேர் உழைத்து, பிகாரில் வரைவு வாக்காளர் பட்டியலை தயாரித்துள்ளனர். ஒவ்வொரு பூத்திலும் சர்பார்க்கப்பட்ட பின், இந்த வரைவுப் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ள நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளின் பூத் அளவிலான முகவர்கள் இந்த பட்டியலில் உள்ள தரவுகளை கையொப்பமிட்டுச் சரிபார்த்துமிருக்கின்றனர். வாக்காளர்கள் தரப்பிலிருந்தும், மொத்தம் 28,730 ஆட்சேபணைகளும் பெறப்பட்டுள்ளன” என்றார்.
வாக்குத் திருட்டு சர்ச்சை குறித்த கேள்விக்கு பதில் கூறியவர், “கடந்த சில நாள்களுக்கு முன், பல வாக்காளர்களின் புகைப்படங்கள் ஊடகத்துக்கு காட்டப்பட்டன. இவையனைத்தும் அனுமதி பெறாமல் நடத்தப்பட்டுள்ளது. அந்த வாக்காளர்கள் மீது சில குற்றச்சாட்டுகளும் சுமத்தப்பட்டுள்ளன.
ஒரே வாக்காளர் 2முறை வாக்களித்துள்ளதாக கூறப்படுகிறதே “சில வாக்காளர்கள் மீது இரு முறை வாக்கு செலுத்தியிருப்பதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, அதற்கான ஆதாரம் இருப்பின் அளிக்கலாம் என்று நாங்கள் கேட்டோம். ஆனால், இதுவரை அதற்கான பதில் இல்லை.
தேர்தல் ஆணையமோ அல்லது எந்தவொரு வாக்காளரோ இதுபோன்ற பொய்யான குற்றச்சாட்டுகளைப் பார்த்து பயப்படவில்லை. இந்தியாவின் வாக்காளர்களைக் குறிவைத்து அரசியலில் ஈடுபடும்போது, அதிலும் தேர்தல் ஆணையத்தின் மீது குற்றம் சுமத்துவதாக அமையும்போது, இன்று, ‘தேர்தல் ஆணையம் அச்சத்திற்கு இடமின்றி பாறை போல உறுதியாக அனைத்து வாக்காளர்கள், அதாவது, அனைத்து பிரிவுகள், மதங்கள் அவற்றிலுள்ள ஏழைகள், செல்வந்தர், மூத்தவர், இளையோர், பெண்கள் என எவ்வித பாகுபாடின்றி உறுதுணையாக அவர்களுடன் நிற்கிறது, இனியும் நிற்கும்’ என்பதை தேர்தல் ஆணையம் ஒவ்வொருவருக்கும் தெளிவுபடுத்த வேண்டியிருக்கிறது” என்றார்.

அடிப்படை ஆதாரமற்ற பொய்யான குற்றச்சாட்டுகள்: “தேர்தல் முடிவுகளை தேர்தல் நடத்தும் அதிகாரி அறிவித்த பின், சட்டத்தின்கீழ், அந்த அறிவிப்பு வெளியான 45 நாள்களுக்குள் அரசியல் கட்சிகள் உச்ச நீதிமன்றத்தை நாடி, தேர்தல் மனுவை தாக்கல் செய்யலாம். அதில், தேர்தலை எதிர்த்து வாதிடலாம். ஆனால், 45 நாள் காலக்கெடு கடந்துவிட்டால், இதுபோன்ற அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைச் சுமத்துவது, அது கேரளம், கர்நாடகம், பிகார் அல்லது வேறு எந்த மாநிலமானாலும் சரி, அது முறையாகாது. தேர்தல் நிறைவுற்று 45 நாள்களுக்குள்ளும் சரி, அதன்பின்பும் சரி, எந்த ஒரு வேட்பாளரும், அரசியல் கட்சியும் எவ்வித முறைகேட்டையும் கண்டறியவில்லை. வாக்காளர்கள் பயன்படுத்தப்பட்டு இருக்கிறார்கள் என்று சொல்லப்பட்டுள்ளது. ஆனால் ஆதாரம் தேவை.
வாக்காளர் பட்டியலில் யாருடைய பெயர்கள் இருக்கிறதோ, அவர்கள் மட்டுமே வாக்கு செலுத்தி ஒரு வேட்பாளரை தேர்ந்தெடுக்க முடியும். மக்களவை தேர்தலில் ஒரு கோடிக்கும் மேற்பட்ட ஊழியர்கள், 10 லட்சத்துக்கும் மேற்பட்ட பூத் அளவிலான முகவர்கள், 20 லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்குச்சாவடி முகவர்கள் தேர்தலுக்காக பணியாற்றியுள்ளனர். மக்கள் பலர் முன்னிலையில் இப்படி வெளிப்படையாக மேற்கொள்ளப்பட்ட செயல்பாட்டில் எந்தவொரு வாக்காளராவது வாக்குகளைத் திருட முடியுமா..?” என்று எதிர்கேள்வி எழுப்பினார்.
ஆனால், இன்று, பல நாள்கள் கழித்து, இப்படி அடிப்படை ஆதாரமற்ற புகார்களைச் சுமத்துவதையும் அதன் பின்னணியில் உள்ள காரணத்தை இப்போது வாக்காளர்களும் மக்களும் புரிந்துகொள்வார்கள்”.
மற்ற மாநிலங்களில் தீவிர சீர்திருத்தம் நடத்தப்படுமா என்ற கேள்விக்கு, “அடுத்ததாக, மேற்கு வங்கம் மற்றும் பிற மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சீர்திருத்தம் எப்போது மேற்கொள்ள வேண்டும் என்பதை 3 தேர்தல் ஆணையர்களும் தீர்மானித்து அறிவிப்பார்கள்” என்றார்.
“இந்திய அரசமைப்பின்படி, இந்திய குடிமக்கள் மட்டுமே மக்களவை, சட்டப்பேரவை தேர்தலுக்கு வாக்கு செலுத்த முடியும். பிற நாடுகளைச் சேர்ந்த மக்களுக்கு அந்த உரிமை கிடையாது. அதன்படியே குடியுரிமைக்கான ஆவணங்கள் தாக்கல் செய்தவர்களின் பெயர்களை பட்டியலில் இருந்து நீக்கி உள்ளோம். ஒருவேளை, அவர்கள் தங்கள் குடியுரிமையை நிரூபிக்க சில ஆவணங்களையும் சமர்ப்பித்தால், அதுகுறித்து முறையான சரிபார்த்தலுக்குப்பின் அவர்களது பெயர்கள் சேர்க்கப்படலாம்.
அதுபோல ஒருவேளை, ஒரு குறிப்பிட்ட தொகுதியைச் சேர்ந்த வாக்காளராக நீங்கள் இல்லையெனில், சட்டத்தின்கீழ் உங்களுக்கு ஒரேயொரு வழியே இருக்கிறது – ‘வாக்காளர்கள் பதிவு சட்டங்கள், சட்டம் எண் 20, உள் பிரிவு(3), உள் பிரிவு (பி)’ அதன்கீழ், நீங்கள் ஒரு குறிப்பிட்ட தொகுதியை சேர்ந்த வாக்காளராக இல்லையெனில், உங்கள் புகாரை பதிவு செய்யலாம்” என்றார்.

பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு சீர்திருத்தப் பணிகள்(எஸ்.ஐ.ஆர்.) பற்றிய கேள்விகளுக்கு, “கடந்த 20 ஆண்டுகளாக வாக்காளர் பட்டியல் சிறப்பு சீர்திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டவில்லை. இதுவரை 10க்கும் மேற்பட்ட முறை இதனை தேர்தல் ஆணையம் நடத்தியுள்ளது. வாக்காளர் பட்டியலில் உள்ள குளறுபடிகளைக் களைவதே இதன் முக்கிய குறிக்கோளாகும்.
அரசியல் கட்சிகளிடமிருந்து புகார்கள் அதிகமாக பெறப்படும்போது, இந்த நடவடிக்கையை தேர்தல் ஆணையத்தால் மேற்கொள்ளப்படுகிறது” “இந்தியாவில் ஒரே வாக்காளர் அடையாள அட்டை எண்ணுடன் ஒன்றுக்கு மேற்பட்ட வாக்காளர்கள் இருப்பதால் குழப்பம் நிலவிய நிலையில், அதனை தேர்தல் ஆணையம் கவனத்திற்கொண்டு கடந்த மார்ச் மாதம் பிரச்சினையை முடித்து தீர்வும் கண்டுள்ளது. ஒட்டுமொத்தமாக சுமார் 3 லட்சம் மக்கள் இந்த குளறுபடியில் இருந்ததும் கண்டறியப்பட்டு பின் சரிசெய்யப்பட்டுள்ளது.
வாக்காளர் பட்டியலில் ஒருவரது பெயர் ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் இடம்பெற்றிருப்பதும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், சம்பந்தப்பட்ட வாக்காளரின் அடையாள அட்டை எண் வெவ்வேறாக இருக்கும். இதனை, ‘ஒரு நபருக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட வாக்காளர் அடையாள அட்டை எண் இருப்பதாக கொள்ளலாம்’.
கடந்த 2003-ஆம் ஆண்டுக்கு முன்பு வரை, தொழில்நுட்ப வசதி பெருமளவில் இல்லாததால், இடம்பெயர்ந்தவர்கள் பலரது பெயர்கள் பல இடங்களில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. ஆனால், இன்று, இணையதள வசதி உள்ளது. இணையதள முகவரியில் பதிவு செய்யும் வசதி வந்துள்ளது. இதனால், இந்த செயல்பாடுகள் எளிமையாக்கப்பட்டுள்ளன. எனினும், அவசரகதியில் இதனை செயல்படுத்தினால், எந்தவொரு வாக்காளரின் பெயரும் விடுபட்டு அல்லது நீக்கப்பட்டுவிடும் அபாயமும் இருக்கிறது. அதையும் கவனத்திற்கொண்டு செயல்பட வேண்டியுள்ளது” என்றார்.
இவ்வாறு கூறினார்.