பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் வாக்கு திருட்டு நடைபெற்றுள்ளது என குற்றம் சாட்டி ஆவணங்களை வெளியிட்ட நிலையில், ராகுல்காந்திக்கு கர்நாடக தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. அதில், அவர் காண்பித்த ஆவணங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டு உள்ளது.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி சமீபத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், கர்நாடகாவில் உள்ள ஒரு தொகுதியில் வாக்காளர் பட்டியலில் நடைபெற்ற முறைகேடுகளை வெளியிட்டு, அதற்கான ஆதாரங்களையும் குறிப்பிட்டார். பா.ஜ.க.வும், தேர்தல் ஆணையமும் கூட்டு சேர்ந்து இதுபோன்ற பெரிய மோசடியில் ஈடுபட்டுள்ளன என தெரிவித்தார்.
பின்னர், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆகஸ்ட் 8, 2025 அன்று பெங்களூருவில் உள்ள ஃப்ரீடம் பார்க்கில் ஒரு போராட்டப் பேரணியைத் தலைமை தாங்கினார். அப்போது, கடுமையான வார்த்தைகளால் ஆன உரையில், நாட்டில் “இடங்களையும் தேர்தல்களையும் திருட” பாஜகவுடன் இணைந்து இந்தியத் தேர்தல் ஆணையம் (ECI) கூட்டுச் சேர்ந்துள்ளதாகக் குற்றம் சாட்டினார் . பின்னர், டெல்லியில் கடந்த வாரம் செய்தியாளர்கள் சந்திப்பின்போது, கர்நாடகத்தில் ஒரு பெண் வாக்காளர் 2 முறை வாக்கு செலுத்தியிருப்பதாக ராகுல் காந்தி பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார். மேலும் இதுகுறித்து நடவடிக்கை எடுக்குமாறு கர்நாடக அரசை அவர் கேட்டுக் கொண்டார்.
இந்த நிகழ்வில் கர்நாடக முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே. சிவகுமார் மற்றும் பல அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். பேரணியைத் தொடர்ந்து, திரு. காந்தி தலைமைத் தேர்தல் அதிகாரி அலுவலகத்திற்கு ஒரு பேரணியை நடத்தி ஒரு குறிப்பாணையை சமர்ப்பிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும், காங்கிரஸ் தலைவர் வருகையைத் தவிர்த்துவிட்டு டெல்லிக்குச் சென்றார்.
ஆகஸ்ட் 7 ஆம் தேதி ‘வாக்கு திருட்டு’ என்று கூறியதைத் தொடர்ந்து, ஆகஸ்ட் 8, 2025 அன்று பிற்பகல் 3 மணிக்குள் சத்தியப்பிரமாணத்தின் கீழ் ஒரு பிரமாணப் பத்திரத்தை சமர்ப்பிக்குமாறு தலைமை நிர்வாக அதிகாரி காந்தியிடம் கேட்டுக் கொண்டார் .
இந்த நிலையில், இந்த விவகாரம் குறித்து ராகுல் காந்திக்கு கர்நாடக மாநில தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. வாக்குச்சாவடி அதிகாரி வெளியிட்ட தரவுகளின்படி, ஒரு குறிப்பிட்ட பெண் வாக்காளர் இருமுறை தேர்தலில் வாக்குப்பதிவு செய்திருப்பதாக ராகுல் காந்தி தெரிவித்திருக்கிறார். ஆனால் விசாரணையில், அந்த வாக்காளர் தான் ஒரேயொரு முறையே வாக்குப் பதிவு செய்ததாக கூறியுள்ளார். ராகுல் காந்தி காட்டிய ஆவணங்கள் மேற்கண்ட தேர்தல் அதிகாரியால் வெளியிடப்பட்டதல்ல என்பது தேர்தல் ஆணைய விசாரணையில் தெரிய வந்துள்ளது. ஆகவே, மேற்கண்ட ஆவணங்கள் எங்களுக்கு கிடைத்தால் இவ்விவகாரத்தில் விரிவான விசாரணை மேற்கொள்ள முடியும் என தெரிவித்துள்ளார்.