சென்னை: உயர் நீதி​மன்​றத்​தில் எம்​பி, எம்​எல்​ஏ-க்​கள் மீதான வழக்​கு​களை விசா​ரித்து வந்த நீதிபதி பி.வேல்​முரு​கன் மாற்​றப்​பட்​டுள்ளார்.  அந்த இடத்துக்கு புதிய நீதிபதியாக,   என்​.சதீஷ்கு​மார் நியமிக்கப்பட்டு உள்ளார். மேலும் சில நீதிப​தி​களின் இலா​காக்​களை​யும் மாற்​றம் செய்து தலைமை நீதிபதி எம்​.எம்​.ஸ்ரீவஸ்​தவா உத்​தர​விட்​டுள்​ளார்.

சென்னை உயர் நீதி​மன்​றத்​தின் புதிய தலைமை நீதிப​தி​யாக கடந்த ஜூலை மாதம் பதவிய  நீதிபதி ஸ்ரீவஸ்தவா பதவி ஏற்ற நிலையில், உயர்நீதிமன்ற நீதிப​தி​களின் இலா​காக்​களை மாற்றம் செய்து அறிவித்துள்ளார்.  பொதுவாக  சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் பணிபுரி​யும் நீதிப​தி​களின் வழக்கு விசா​ரணைக்​கான இலா​காக்​கள் 3 மாதங்​களுக்கு ஒரு​முறை மாற்றி அமைக்​கப்​படும்.   அதன்படி தற்போது மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.  இந்த இலாகா மாற்றம்  செப்​டம்​பரில்  நடைபெற இருந்த  நிலை​யில், இரு மாதங்களுக்கு முன்பே மாற்றப்பட்டு உள்ளது.

அதன்படி, எம்​பி, எம்​எல்​ஏ-க்​கள் மீதான வழக்​கு​களை விசா​ரித்து வந்த நீதிபதி பி.வேல்​முரு​கன், மேல்​முறை​யீடு மற்​றும் சிவில் மறுஆய்வு வழக்​கு​களை விசா​ரிக்​கும் நீதிப​தியாக மாற்றப்​பட்​டுள்​ளார்.  எம்​பி, எம்​எல்​ஏ-க்​கள் மீதான வழக்​கு​களை நீதிபதி என்.சதீஷ்கு​மார் விசா​ரிக்​க​வுள்​ளார்.

குற்​ற​வியல் வழக்​கு​கள் மற்​றும் முன்​ஜாமீன் வழக்​கு​களை நீதிபதி ஜி.ஜெயச்​சந்​திரன் விசாரிக்கவும்,  இந்​துசமய அறநிலை​யத்​துறை, திரைப்படம், மின்​வாரி​யம் தொடர்​பான வழக்​கு​களை நீதிபதி என்​.ஆனந்த் வெங்​கடேஷ் விசாரிக்கவும், , சிபிஐ தொடர்​பான வழக்​கு​களை நீதிபதி எம்.நிர்​மல்​கு​மாரும், குற்​ற​வியல் மேல்​முறை​யீட்டு வழக்​கு​களை நீதிபதி ஜி,கே.இளந்​திரையனும் விசா​ரிக்​க நியமிக்கப்பட்டு உள்ளனர்.  இது​மட்டுமினறி, மேலும் பல நீதிப​தி​களின் இலா​காக்​கள்​ மாற்​றியமைக்​கப்​பட்​டுள்​ளது.