மும்பை: கடன்கள் மற்றும் குறுகிய கால கடன்களுக்கான ‘ரெப்போ ரேட்’ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை என ஆர்பிஐ கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா அறிவித்துள்ளார்.
‘ரெப்போ ரேட்’ எனும் வங்கிகளுக்கான குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதங்களில் மாற்றமில்லை. ரெப்போ ரேட் விகிதம் 5.5 சதவிகிதமாகவே தொடரும் என ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா அறிவித்துள்ளார்.

ரெப்போ விகிதம் என்பது வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் கடனுக்கு விதிக்கப்படும் வட்டி விகிதமாகும். ரெப்போ விகிதம் கடந்த 5 ஆண்டுகளாக 6.50% ஆக இருந்த நிலையில், கடந்த பிப்ரவரி 7-ம் தேதி 0.25% குறைக்கப்பட்டு, 6.25% ஆக இருந்தது. இந்நிலையில், அடுத்த இரண்டு மாதங்களில் அது மேலும் 25 அடிப்படை புள்ளிகள் குறைக்கப்பட்டு 6% ஆக மாற்றப்பட்டது. இதைத்தொடர்ந்து ஜுன் மாதம் நடைபெற்ற நிதிக்கொள்கைக்குழு கூட்டத்தை அடுத்து மேலும் 50 அடிப்படை புள்ளிகள் குறைக்கப்பட்டு, அதாவது, குறுகிய கால கடனுக்கான ரெப்போ வட்டி விகிதம் 6 சதவீதத்தில் இருந்து 5.5% ஆக குறைக்கப்பட்டுள்ளது. இது கடந்த 3 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைந்த விகிதமாகும். இதைத்தொடர்ந்து, அதே வட்டி விகித்தில் தொடர்ந்து வருகிறது.
இதன்மூலம் வீடு, வாகனக் கடன்களுக்கான வட்டி விகிதம் குறைய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த வட்டி விகிதக் குறைப்பு உடனடியாக அமலுக்கு வருவதாக ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா அறிவித்திருந்தார்.
இதைத்தொடர்ந்து, இன்று செய்தியளார்களிடம் பேசிய ஆர்பிஐ கவர்னர் மல்கோத்ரா ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை என அறிவித்து உள்ளார்.
வட்டி விகிதங்களில் மாற்றம் குறித்து இந்திய ரிசர்வ் வங்கியின் ஒருமுறை நிதிக்கொள்கைக் குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு செய்தியாளர்களை சந்தித்த ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா , ரெப்போ ரேட் விகிதம் 5.5 என்ற அளவிலும், இந்த ஆண்டு பிப்ரவரி முதல் சில்லறை பணவீக்கம் 4 சதவீதத்திற்கும் குறைவாகவே உள்ளது. பிப்ரவரி முதல் 3 முறை ரெப்போ வட்டி விகிதம் 1 சதவீதம் குறைக்கப்பட்டு உள்ளது. வளர்ந்து வரும் பொருளாதார மற்றும் நிதி முன்னேற்றங்கள் மற்றும் எதிர்கால தொலைநோக்கு பார்வை அடிப்படையில் ரெப்போ வட்டி விகிதத்தை 5.5 சதவீதத்தை மாற்றாமல் வைத்திருக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.
இந்திய பொருளாதாரம் வலுவாக உள்ளதாகவும் கூறினார்