டெல்லி: ஜம்மு-காஷ்மீர் முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக் காலமானார். உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று டெல்லி மருத்துவமனையில் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

ஜம்மு-காஷ்மீர் உள்பட பல மாநிலங்களில் ஆளுநராக பணியாற்றிய முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக் (79) உடல்நலக் குறைவால் டெல்லியில் காலமானார். இவர் நீண்ட நாட்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு டெல்லி ராம் மனோகர் லோகியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று மதியம் 1 மணியளவில் சத்யபால் மாலிக் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
79வயதான சத்யபால் மாலிக் உத்தரப் பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் . உத்தரப்பிரதேசத்தில் இருந்து 2 முறை மாநிலங்களவைக்கும், ஒருமுறை மக்களவைக்கும் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் ஒடிசா, பீகார், கோவா, மேகாலயா உள்ளிட்ட மாநிலங்களிலும் ஆளுநராக சத்யபால் மாலிக்.
இவர் பாரதிய கிராந்தி தள், ஜனதா தள், இந்திய தேசிய காங்கிரஸ், லோக் தள், சமாஜ்வாதி கட்சி ஆகியவற்றில் இணைந்து மக்கள் பணியாற்றி யிருக்கிறார். ஜம்மு-காஷ்மீரில் 370-வது சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்டபோது சத்யபால் மாலிக் ஆளுநராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.