பாட்னா: பீகாரில் திருத்தப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியல் இன்று மாலை 3மணிக்கு வெளியாக உள்ளது. இதைத்தொடர்ந்து,  வாக்காளா் பட்டியலில் பெயா்களை நீக்க அல்லது சோ்க்க 1 மாத அவகாசம்  வழங்கப்படுவதாக இந்திய தோ்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

பீகார் மாநிலத்தில் வரும் நவம்பர் மாதம்  அல்லது டிசம்பரில் சட்டபேரவைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதனை தொடர்ந்து கடந்த ஜுன் 24 அன்று இந்திய தேர்தல் ஆணையம் பீகாரில் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தம் நடைபெறும் என்ற அறிவிப்பை வெளியிட்டது.  பீகார் மாநில வாக்காளர் பட்டியலில், அகதிகளாக வந்த ரோஹிங்கியாக்கள், வங்கதேசத்தவர்கள் இடம்பெற்றுள்ளதால், அவர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கவும், போலி வாக்காளர்களை அகற்றவும் தீவிர வாக்காளர் சீர் திருத்தத்தை  இந்திய தேர்தல் ஆணையம் மேற்கொண்டது. இதில் முறையான ஆவனங்களை வழங்காதவர்கள், இறந்தவர்கள் பெயரிலான வாக்குகள், ஒரே நபர் பல பெயர்களில் பல இடங்களில் இடம்பெற்றுள்ளது என பல லட்சம் போலி வாக்காளர்கள் கண்டறியப்பட்டு, அவர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கி நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்த அறிவிப்பிற்கு எதிர் கட்சிகள் சார்பில் கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், தேர்தல் ஆணையமானது பீகார் SIRன் வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்படுகிறது. வரைவு வாக்காளர் பட்டியல் இன்று மாடில 3 மணி அளவில்  வெளியாக உள்ளது.

இதையடுத்து,  செய்தியாளர்களிடம் பேசிய இந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமார்,   வாக்காளா் பட்டியலில் வாக்களிக்க தகுதியுடைய வாக்காளா்களின் பெயா்களை சோ்ப்பது அல்லது தகுதியற்ற வாக்காளா்களின் பெயரை நீக்குவது குறித்து அரசியல் கட்சிகள் மற்றும் வாக்காளா்கள் பரிந்துரைகள் வழங்க ஒரு மாதம் அவகாசம் வழங்கப்படும் என  தெரிவித்தாா்.

இது குறித்து  இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்தியில், ”பீகார் வரைவு வாக்காளர் பட்டியல் ஆகஸ்ட் 1, 2025 ( இன்று) அன்று வெளியிடப்படும். வரைவு வாக்காளர் பட்டியல் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு நேரடி மற்றும் டிஜிட்டல் வடிவத்தில் வழங்கப்படும்.  மொத்தமுள்ள 243 தொகுதிகளைச் சோ்ந்த வாக்காளா்கள் அல்லது அரசியல் கட்சிகள் என யாராக இருப்பினும் மாநில தலைமைத் தோ்தல் அலுவலா் (சிஇஓ) மற்றும் 243 தோ்தல் பதிவு அலுவலா்களிடம் (இஆா்ஓ) தங்களது குறைகளைத் தெரிவிக்கலாம். அதன்படி ஆக.1 முதல் செப்.1 வரை தகுதியான வாக்களா்களின் பெயா்கள் சோ்க்கப்படும்.

தகுதியற்ற வாக்காளா்களின் பெயா்கள் வரைவு வாக்காளா் பட்டியலில் இருந்து நீக்கப்படும் என்றாா். இன்று முதல், வாக்காளர்கள் தங்கள் பெயர்கள் மற்றும் தனிப்பட்ட விவரங்களை இணையத்தளத்தில் சரிபார்க்க முடியும். வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர்களைச் சேர்த்தல், நீக்குதல் மற்றும் ஆட்சேபனைகள் போன்ற திருத்தங்களை மேற்கொள்ள விரும்புவோர் ஆகஸ்ட் 1 முதல் செப்டம்பர் 1 வரை விண்ணப்பிக்கலாம். மேலும் இது ஒரு வரைவு பட்டியல் ஆகும். இறுதி வாக்காளர் பட்டியல் செப்டம்பர் 30 அன்று வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடைசியாக பீகாரில் 2003ல் வாக்காளர் பட்டியல் திருத்தம் நடைப்பெற்றிருந்தது. இதனைத் தொடர்ந்து 22 ஆண்டுகளுக்கு பிறகு பீகாரில் தீவிர சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தம் நடைபெற்றது எகுறிப்பிடத்தக்கது.

பீகாரில் 65 லட்சம் போலி வாக்காளர்கள் நீக்கம்! தேர்தல் ஆணையம் அதிரடி

ஆதார், வோட்டர் ஐடி,  ரேஷன் கார்டுகள் வாக்காளர் தகுதிக்கான ஆதாரம் அல்ல! உச்சநீதிமன்றத்தில் இந்திய தேர்தல் ஆணையம் தகவல்