டெல்லி

கார்கேவை மனநிலை பிறழ்ந்தவர் என பேசியதற்கு ஜே பி நட்டா மன்னிஉ கேட்டுள்ளார்.

நேற்று நாடாளுமன்ற மாநிலங்களவையில், பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூர் ஆகியவை குறித்த விவாதத்தில் எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஒரு மணி நேரம் பேசியபோது பிரதமர் மோடி குறித்து சில குற்றச்சாட்டுகளை தெரிவித்தார். அப்போடு அவை முன்னவரும், மத்திய அமைச்சருமான ஜே.பி.நட்டா, கார்கேவுக்கு மனநிலை பிறழ்ந்து விட்டதாக ஆவேசமாக தெரிவித்தார்.

கார்கே, ஜே.பி.நட்டா தன்னை மனநிலை சரியில்லாதவர் என்று குறிப்பிட்டது தமக்கு வருத்தமளிப்பதாகக் கூறினார். தாம் பாஜக அரசில் தான் மதிக்கும் ஒரு சில அமைச்சர்களில் நட்டாவும் ஒருவர் என்றும், அவரே இப்படிப் பேசியது வெட்கக்கேடானது என்றும் குறிப்பிட்டார். எதிர்க்கட்சி எம்.பி.க் கள் ஜே பி நட்டா மன்னிப்பு கேட்குமாறு கோரினர்.

அதையொட்டி, ஜே.பி.நட்டா

“என் வார்த்தைகளை ஏற்கனவே திரும்ப பெற்று விட்டேன். பிரதமர் மோடி, உலகம் முழுவதும் பிரபலமான தலைவர். அது பா.ஜனதாவுக்கு மட்டுமின்றி, நாட்டுக்கே பெருமை. ஆனால் அந்த பெருமையை பற்றி கருதாமல், கார்கே பேசியது ஆட்சேபனைக்குரியது. இருப்பினும், எனது வார்த்தைகள் அவரை காயப்படுத்தி இருந்தால், நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். அதே சமயத்தில், கார்கே வரம்பு மீறி பேசியதை நீக்க வேண்டும்”

என்று கூறி உள்ளார்