பாட்னா

பீகார் மாநிலத்தில் ஒரு வளர்ப்பு நாய்க்கு குடியுரிமை சான்று அளிக்கப்பட்டுள்ளது

 

விரைவில் நடைபெற உள்ளா பீகார் சட்​டப்​பேர​வைத் தேர்​தலை முன்னிட்டு வாக்​காளர் பட்​டியலில் சிறப்பு திருத்​தப் பணி மேற்கொள்ளப்படுகிறது. கடந்த 2003-ம் ஆண்​டுக்கு பிறகு வாக்​காள​ராக பதிவு செய்து கொண்​ட​வர்​கள், தாங்​கள் இந்​திய குடிமகன் என்​பதை நிரூபிக்க பிறப்பு சான்​று, பாஸ்​போர்ட், குடி​யிருப்பு சான்று போன்ற கூடு​தல் ஆவணங்​களை சமர்ப்​பிக்க வேண்​டிய கட்​டா​யம் எழுந்​து உள்​ளது.

பீகார் தலைநகர் பாட்​னா​வின் சவுரி பகு​தி​யில் ‘டாக் பாபு’ என்ற பெயரில் வளர்ப்பு நாய்க்கு குடி​யிருப்பு சான்றிதழ் வழங்​கப்​பட்டு உள்​ளது. டாக் பாபு​வின் தந்தை பெயர் குடா பாபு, தாயின் பெயர் குடி தேவி என்று சான்​றிதழில் குறிப் பிடப்​பட்டு உள்​ளது. சான்​றிதழில் பீகார் வரு​வாய் துறை அதி​காரி முராரி சவு​கான் கையெழுத்​திட்டு உள்​ளார்.

மாநில அரசு அலு​வல​கத்​தின் கவுன்ட்டர் மூல​மாக நேரடி​யாக வழங்​கப்​பட்​டுள்ள சான்​றிதழில் நாயின் புகைப்​பட​மும் அச்​சிடப்​பட்டு உள்​ளது. இது சமூக வலை​தளங்​களில் வெளி​யாகி, வைரலாக பரவி வரு​வதால் நாய்க்கு வழங்​கப்​பட்ட  குடி​யிருப்பு சான்​றிதழை பீகார் வரு​வாய் துறை நேற்று ரத்து செய்​துள்ளது.