கொல்கத்தா: ரூ.1 கோடி ‘டிஜிட்டல்’ மோசடி  தொடர்பான வழக்கில்  9 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து கொல்கத்தா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்தியாவின் முதல் டிஜிட்டல் மோசடி தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட 9 பேருக்கும் கொல்கத்தா உயர்நீதிமன்றம்  ஆயுள் தண்டனை விதித்துள்ளது. இது பொருளாதார பயங்கரவாதம் என விமர்சித்துள்ள நீதிபதிகள், ஒன்பது குற்றவாளிகளான முகமது இம்தியாஸ் அன்சாரி, ஷாஹித் அலி ஷேக், ஷாருக் ரபிக் ஷேக், ஜதின் அனுப் லாட்வால், ரோஹித் சிங், ரூபேஷ் யாதவ், சாஹில் சிங், பதான் சுமையா பானு, பதான் சுமையா பானு மற்றும் ஃபால்டு அசோக் ஆகிய 9 பேரும் குற்றவாளிகள் என உறுதி செய்து  ஆயுள் தண்டனை விதித்துள்ளது.

நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 108 பேரிடம், இந்த கும்பல் ரூ.1 கோடிக்கு மேல் மோசடி செய்திருப்பதாவும், இதில் ஒரு பெண் உள்பட 9 பேர் மகாராஷ்டிரம், ஹரியாணா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து கைது செய்யப்பட்டுள்ளதும், இவர்கள் நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு வழக்குகளை எதிர்கொள்ள வேண்டிய நிலையில் இருப்பதும் தெரிய வந்துள்ளது.

இந்த டிஜிட்டல் மோசடி வழக்கில், கடந்த ஆண்டு ரனகத் பகுதியைச் சேர்ந்த ஒருவரை, டிஜிட்டல் கைது செய்திருப்பதாகக் கூறி, அவரிடமிருந்து ரூ.1 கோடி மோசடி செய்தது தொடர்பான வழக்கை வசிரித்த வந்த மேற்கு வங்க மாநிலம் நாடியா மாவட்டத்தில் உள்ள கல்யாணி நீதிமன்றம் விசாரித்து வந்தது. இந்த மோசடி தொடர்பாக 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள்மீது,  மோசடியாக ஆவணங்களைத் தயாரித்தல் உள்ளிட்ட பல்வேறு குற்றப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்த  நிலையில்  குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

விசாரணையின்போது அரசு தரபிபல்,  டிஜிட்டல் குற்றவாளிகள் அனைவரும், தங்களுக்கு எதிராக மிக உறுதியான டிஜிட்டல் சாட்சிகளை உருவாக்கி வைத்திருந்தை நிரூபித்தனர். குற்றவாளிகளிடம்  ஏராளமான வங்கிக் கணக்குப் புத்தகம், ஏடிஎம் அட்டைகள், சிம் கார்டுகள், செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மோசடிப் பணத்தை நாடு முழுவதுமிருக்கும் ஏராளமான வங்கிக் கணக்குக்கு இவர்கள் பரிமாற்றம் செய்திருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதை சுட்டிக்காட்டி அவர்கள்மீதான குற்றங்கள் நிரூபிக்கப்பட்டு உள்ளன.

அக்டோபர் 2024 சம்பவத்தின் எட்டு மாதங்களுக்குள் விசாரணை நிறைவடைந்து தீர்ப்பு வழங்கப்பட்டு உள்ளது.  வாட்ஸ்அப் ஆள்மாறாட்டம் மோசடி மூலம் பாதிக்கப்பட்டவர்கள் ரூ. 1 கோடி மோசடி செய்தது நிரூபிக்கப்பட்டுள்ளதுடன்,  குற்றம் சாட்டப்பட்டவர்கள் நாடு தழுவிய அளவில் செயல்பட்டு, 100க்கும் மேற்பட்டவர்களை பலியாகக் கொடுத்தனர் என்பதும் தெரிய வந்துள்ளது. இந்த வழக்கு தொடர்பாக பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 29 பேரிடம் விசாரணை நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. வங்கி மேலாளர்களிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

இந்த வழக்கை விசாரித்த காவல்துறையினர் கிட்டத்தட்ட 2,600 பக்கங்களைக் கொண்ட குற்றப்பத்திரிகையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். இவர்களது மோசடியில் சிக்கிப் பணத்தை இழந்தவர்கள், தங்களது வாழ்நாள் சேமிப்பை இழந்துவிட்டதாகவும், இது பொருளாதார பயங்கரவாதம் என்றும் அரசுத்தரப்பு வழக்குரைஞர் வாதத்தை முன்வைத்த நிலையில், நாட்டிலேயே முதல் முறையாக நிதி மோசடிக்கு ஆயுள் தண்டனை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் நடந்து எட்டு மாதங்களுக்குள் முடிவடைந்த விசாரணையைத் தொடர்ந்து, வியாழக்கிழமை குற்றம் சாட்டப்பட்டவர்களை குற்றவாளிகள் என்று நீதிமன்றம் கண்டறிந்த பின்னர் தண்டனை அறிவிக்கப்பட்டது. கூடுதல் அமர்வு நீதிபதி  நேற்று (ஜுலை 18ந்தேதி வெள்ளிக்கிழமை)  தீர்ப்பை வழங்கினார்.

ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பில், மேற்கு வங்க நீதிமன்றம் வெள்ளிக்கிழமை டிஜிட்டல் கைது சைபர் மோசடி வழக்கில் நாட்டின் முதல் தண்டனையாக ஒன்பது நபர்களுக்கு ஆயுள் தண்டனை விதித்தது. சைபர் குற்றங்கள் அதிகரிப்பதற்கு எதிரான இந்தியாவின் போராட்டத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கும் வகையில், நாடியா மாவட்டத்தில் உள்ள கல்யாணி நீதிமன்றத்தால் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டது.