டெல்லி

ண்டிகோ விமானம் ஒன்று நடுவானில் எஞ்சின் பழுதடநிததால் அவசரமாக தரை இறக்கப்பட்டுள்ளது.

 

டெல்லியில் இருந்து கோவா நோக்கி நேற்று ஒரு இண்டிகோ விமானம் புறப்பட்டது.  191 பேர் பயணம் செய்த இந்த விமானம், நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது.

விமானி, அவசரமாக மும்பையில் உள்ள விமான நிலையத்துக்கு தகவல் தெரிவித்து விவரத்தை கூறினார். விமானம், மும்பையில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.  இந்த தகவலி இண்டிகோ நிறுவன செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

அவர், ‘

“தொழில்நுட்ப கோளாறால் விமானம் இரவு 9.52 மணிக்கு மும்பை சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது. அந்த விமானத்தில் பயணித்த பயணிகளுக்கு மாற்று விமானம் ஏற்பாடு செய்யப்பட்டது”

என்று தெரிவித்துள்ளார்,