டெல்லி: ​நா​டாளு​மன்ற மழைக்​கால கூட்​டத்​தொடர் ஜூலை 21-ம் தேதி தொடங்க உள்ள நிலையில், இன்று காங்கிரஸ் எம்.பி.க்கள் கூட்டம்  காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், எம்.பி.யுமான சோனியா காந்தி தலைமையில் நடைபெறுகிறது.

இந்த கூட்டத்தில்,  மழைக்கால கூட்​டத்​தொடரில் எவ்​வாறு செயல்​படு​வது, எழுப்ப வேண்​டிய முக்​கிய பிரச்​சினை​கள் குறித்து விவா​திக்கபட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வரும் 21ந்தேதி தொடங்குகிறது.  ஆகஸ்டு 21ந்தேதி வரை நடைபெறும் இந்த கூட்டத்தொடரில் மத்தியஅரசு சில புதிய மசோதாக்களை தாக்கல் செய்ய உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன்படி,  இந்த  கூட்டத்தொடரில் அணுசக்தி துறையில் தனியார் துறை நுழைவதை அனுமதிப்பது உட்பட சில முக்கிய சட்டங்களை கொண்டுவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில்,   ஜம்மு – காஷ்மீரில் பஹல்​காம் சுற்றுலா தளத்தில் தீவிர​வாதிகள் நடத்திய தாக்​குதலில் 26 சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டனர். அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் மத்​திய அரசு “ஆபரேஷன் சிந்​தூர்” நடவடிக்​கையை மேற்​கொண்டு பாகிஸ்​தானில் உள்ள முக்​கிய தீவிர​வாத முகாம்​களை அழித்​தது. மேலும் ஈரானில் இருந்து இந்தியர்கள் மீட்பு உள்பட பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது.

மேலும் அகதிகளாக வந்து,. திருட்டுத்தமான வாக்குரிமை பெற்றுள்ள நேபாளம், வங்கதேசம், பாகிஸ்தான் நாடுகளை சேர்ந்தவர்களை இந்திய தேர்தல் ஆணையம் அதிரடியாக நீக்கி நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கு காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்தும், உச்சநீதிமன்றத்தை நாடியும், அதற்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுத்து விட்டது. இதனால், போலி ஆதாரங்கள் மூலம் வாக்குரிமை பெற்றவர்களை நீக்கும் பணிகளை தேர்தல் ஆணையம் தீவிரமாக நடைமுறைப்படுத்தி உள்ளது. தற்போது பீகாரில் நடைமுறைப்படுத்தப்படும் இந்த திட்டம் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட உள்ளது.

நாடாளுமன்றத்தை முடக்கும் வகையில், காங்கிரஸ் எம்.பி.க்கள்,  இந்​தி​யா-​பாகிஸ்​தான் போர் நிறுத்​தத்​தில் அமெரிக்க அதிபர் ட்ரம்​பின் தலை​யீடு குறித்​தும் காங்​கிரஸ் உள்​ளிட்ட எதிர்க்​கட்​சிகள் விவாதத்தை கிளப்​பும் என்று எதிர்​பார்க்​கப்​படு​கிறது. மேலும், பிஹார் வாக்​காளர் பட்​டியலில் சிறப்பு தீவிர திருத்​தம் மேற்​கொள்​ளும் தேர்​தல் ஆணை​யத்​தின் நடவடிக்கை குறித்தும் பிரச்சினை எழுப்பி நாடாளுமன்றத்தை முடக்கும் என நம்பப்படுகிறது.

இந்த நிலை​யில், மழைக்​கால கூட்​டத்​தொடரில் எவ்​வாறு செயல்பட வேண்​டும் என்ற உத்​தியை இறுதி செய்​வதற்​காக காங்​கிரஸ் எம்​.பி.க்​கள் அடங்​கிய ஆலோசனை கூட்​டம் காங்​கிரஸ் நாடாளு​மன்​றக் கட்சி தலை​வர் சோனியா காந்தி தலை​மை​யில் இன்று நடை​பெறவுள்​ளது.

டெல்லி ஜன்​பத் சாலை​யில் உள்ள சோனி​யா​வின் இல்​லத்​தில் நடை​பெறவுள்ள இந்த கூட்​டத்​தில் காங்​கிரஸ் கட்​சி​யின் தேசிய தலை​வர் மல்​லி​கார்​ஜூன கார்​கே, ராகுல் காந்தி உள்​ளிட்​டோர் கலந்து கொள்​கின்​றனர்.

இதனிடையே, மழைக்​கால கூட்​டத்​தொடர் தொடர்​பான அனைத்​துக் கட்சி கூட்​டம் ஜூலை 19-ம் தேதி நடை​பெறும்​ என்​று அறிவிக்​கப்​பட்​டுள்​ளது.