பெங்களூரு

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கர்நாடக அரசியலால் கடும் அதிருப்தி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது/

கர்​நாட​க முதல்வர் சித்தராமையா தலைமையில்  காங்​கிரஸ் அரசு 2 ஆண்​டு​களை நிறைவு செய்​துள்ளநிலையில், துணை முதல்வர் டி.கே.சிவகு​மாரின் ஆதர​வாளர்​கள் முதல்​வர் பதவி கேட்டு போர்க்​கொடி தூக்​கி​யுள்​ளனர். எனவே  டி.கே.சிவகு​மார், சித்​த​ராமையா இடையே பனிப்​போர் நீடிக்​கிறது. இதையொட்டி இரு​வரும் கடந்த 7-ம் தேதி டெல்​லிக்கு சென்​றனர்.

அங்கு அவர்கள் காங்​கிரஸ் தலை​வரும், மக்​களவை எதிர்க்​கட்​சித் தலை​வரு​மான ராகுல் காந்​தியை தனித்​தனி​யாக சந்​திக்க அனு​மதி கோரியுள்ளனர்.  ராகுல் காந்தி அவர்களை சந்​திக்க நேரம் ஒதுக்​க​வில்​லை என்பதால் காங்​கிரஸ் தேசிய தலை​வர் மல்​லி​கார்​ஜுன கார்​கேவை சந்​தித்​து​விட்டு பெங்​களூரு திரும்​பினர்.

நேற்று மீண்​டும் சித்​த​ராமை​யா​வும், டி.கே.சிவகு​மாரும் டெல்​லிக்கு சென்​று இரு​வரும் ராகுல் காந்​தியை சந்​திக்க நேரம் கேட்​டு இப்போதும்அவர் நேரம் ஒதுக்​க​வில்லை என்பதால் இரு​வரும் காங்​கிரஸ் பொதுச்​செய​லா​ளர் ரன்​தீப் சுர்​ஜே​வாலாவை சந்​தித்து பேசினர். இவ்வாறு சித்​த​ராமை​யா, டி.கே.சிவகு​மார் இரு​வரை​யும் ராகுல் சந்​திக்க மறுத்த விவ​காரம் காங்​கிரஸ் வட்​டாரத்​தில் சர்ச்​சையை ஏற்​படுத்​தி​யுள்​ளது.

காங்​கிரஸ் மூத்த தலை​வர் ஒருவர் இது குறித்து,

‘‘சித்​த​ராமை​யா​வும், டி.கே.சிவகு​மாரும் முதல்​வர் பதவிக்​காக மோதிக்​கொள்​வது காங்​கிரஸ் ஆட்​சிக்கு மக்​களிடையே அவப்​பெயரை ஏற்​படுத்​தி​யுள்​ளது. இதனால் ராகுல் காந்தி கடும் அதிருப்தி அடைந்​துள்​ளார். எனவே இரு​வரை​யும் சந்​திக்க நேரம்​ ஒதுக்​க மறுத்​து​விட்​டார்​”

எனத் தெரி​வித்துள்ளார்​