டெல்லி
மத்திய அரசு தனது எல் ஐ சி பங்குகளை விற்பனை செய்ய உள்ளது/

கடந்த 2022-ம் ஆண்டு மத்திய அரசுப ொதுத்துறை காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி.யின் 3.5 சதவீத பங்குகளை விற்பனை செய்ததன்மூலம் மத்திய அரசுக்கு ரூ.21 ஆயிரம் கோடி வருவாய் கிடைத்தது.
மத்த்ய அரசின் விதிமுறைப்படி, 2027-ம் ஆண்டு மே 16-ந் தேதிக்குள், மேலும் 6.5 சதவீத எல்.ஐ.சி. பங்குகளை மத்திய அரசு விற்க வேண்டியது கட்டாயம் ஆகும். தற்போது, எல்.ஐ.சி.யில் மத்திய அரசுக்கு 96.5 சதவீத பங்குகள் உள்ளன.
எனவே மீண்டும் பங்குகளை விற்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
அதுபற்றிய ஆலோசனை, ஆரம்ப கட்டத்தில் உள்ளதாகவும் தற்போது எவ்வளவு பங்குகளை விற்பது, விலைவிவரம், காலம் ஆகிய விவரங்கள் உரிய நேரத்தில் முடிவு செய்யப்படும் என்றும் மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.