சென்னை

ரும் 18 அன்று முதல்வர் மு க ஸ்டாலின் தலைமையில் திமுக எம் பிக்கள் கூட்டம் நடைபெற உள்ளதாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

இன்று திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன்,

“திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மக்களவை – மாநிலங்களவை உறுப்பினர்கள் கூட்டம், 18-07-2025 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு, சென்னை, அண்ணா அறிவாலயம், ‘முரசொலி மாறன் வளாகத்தில்’ உள்ள கூட்ட அரங்கில் நடைபெறும்.

அதுபோது, கழக மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். நடைபெற உள்ள நாடாளுமன்ற கூட்டத் தொடர் குறித்து அந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்படும்.”

என்று அறிவித்துள்ளார்.

நாடாளு​மன்ற மழைக்​கால கூட்​டத் தொடர் ஜூலை 21 முதல் ஆகஸ்ட் 21 வரை நடைபெறவுள்ளது. சுதந்​திர தினத்தை முன்​னிட்டு ஆகஸ்ட் 13, 14-ல் மட்​டும் நாடாளு​மன்​றத்​தில் பணி​கள் நடை​பெறாது என்று நாடாளு​மன்ற விவ​காரத் துறை அமைச்​சர் கிரிண் ரிஜிஜு தெரி​வித்​துள்​ளார்.

மேலும் கூட்​டத்தொடரை ஆகஸ்ட் 12-ம் தேதி​யுடன் முடிக்க ஏற்கெனவே திட்டமிடப்பட்ட நிலையில் தற்​போது ஆகஸ்ட் 21 வரை நடைபெறுவதாக அறிவிக்​கப்​பட்​டுள்​ளது

ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்​கைக்​கு ​பிறகு, முதல்முறை​யாக நாடாளு​மன்​றம் கூடு​வ​தால், அந்த நடவடிக்கை குறித்​தும், இந்​தி​யா – பாகிஸ்​தான் போர்நிறுத்​தத்​தில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்​பின் தலை​யீடு குறித்தும் விவாதம் நடை​பெறும் எனத் தெரி​கிறது. கூட்​டத்தொடர் தொடர்பான அனைத்​துக் கட்​சி ஆலோசனை கூட்டம் வரும் 19-ம் தேதி நடைபெற உள்ளது.

இந்நிலையில், நாடாளுமன்ற கூட்டத்தொடர் குறித்து ஆலோசிக்க திமுக எம்.பி.க்கள் கூட்டம் ஜூலை 18 காலை 10.30 மணியளவில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்/