சென்னை:  சிவசேனா இந்திக்கு எதிரானது அல்ல,  இந்தி  திணிப்புக்கு எதிரானது என  உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவ சேனா தெளிவுபடுத்தி உள்ளது. தமிழ்நாட்டின் நிலைபாட்டுக்கும் எங்களின் நிலைப்பாட்டுக்கும் வித்தியாசம் உள்ளது என்றும் கூறியுள்ளது.

மகாராஷ்டிராவின் போராட்டம் தொடக்கப் பள்ளிகளில் இந்தி கட்டாயமாக்கப்படுவதற்கு எதிரானது என்று சிவசேனா (UBT) கூறுகிறது,  இந்தி விஷயத்தில், தங்களுக்கு MK ஸ்டாலினின் பொது ஆதரவு இருந்தபோதிலும் அவரது நிலைப்பாட்டிலிருந்து மாறுபடுவதாக தெரிவித்துள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் சிவசேனா பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு இந்தியா மொழி மூன்றாவது மொரியாக பயிற்றுவிக்க மாநில அரசு  முயற்சி செய்தது. இதற்கு உத்தவ் தலைமையிலான சிவனா, காங்கிரஸ் மற்றும், ராஜ்தாக்கரே கட்சி உளப்ட பல எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தன. இதையடுத்து, பள்ளிகளில் மூன்றவாது மொழியாக இந்தியை கற்பிக்கும் முயற்சியை முதல்வர் பட்னாவிஸ்  கைவிட்டார். இதுதொடர்பான விமர்சனங்கள் எழுந்துள்ளன.

அரசு உத்தரவை வாபஸ் பெற்றதை கொண்டாடும் வகையில், மும்பையில்  உத்தவ் தாக்கரே, ராஜ் தாக்கரே இணைந்து மாபெரும் கூட்டத்தை நடத்தினர். 19 ஆண்டுகளுக்கு பின், இருவரும் ஒரே மேடையில் தோன்றியதை பார்த்து, அவர்களின் கட்சித் தொண்டர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

இதை வைத்து தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின், மத்திய பாஜக அரசுக்கு எதிராக  தனது அரசியல் ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், ‘ஹிந்தி திணிப்பை எதிர்த்து, தி.மு.க.,வும், தமிழக மக்களும் தலைமுறை தலைமுறையாக நடத்தும் மொழி உரிமைப்போர், மாநில எல்லைகளைக் கடந்து, மஹாராஷ்டிராவில் சூறாவளியாக சுழன்றடிக்கிறது. 19 ஆண்டுக்கு பின் ஒரே மேடையில் உத்தவ் – ராஜ் இணைந்துள்ளனர். அவர்களை மராத்தி தெரியாதவர்களை அடியுங்கள் என ஆவேசமாக பேசியுள்ளனர்.   ‘மக்கள் எழுச்சிக்கு அஞ்சி, பா.ஜ., இரண்டாவது முறையாக பின்வாங்கியுள்ளது’ என, குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில், அந்த முயற்சிகளை சிவசேனா இந்திக்கு எதிரானது அல்ல,  இந்தி  திணிப்புக்கு எதிரானது என  உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவ சேனா தெளிவுபடுத்தி உள்ளது. மஹாராஷ்டிராவின் போராட்டம் ஆரம்பப் பள்ளிகளில் ஹிந்தியைக் கட்டாயமாக்குவதற்கு எதிராக மட்டுமே என்று சிவசேனா (UBT) கூறி உள்ளது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய உத்தவ் சிவசேனா கட்சி மூத்த எம்.பி., சஞ்சய் ராவத், துவக்கப் பள்ளிகளில் ஹிந்தி திணிப்பதை மட்டுமே உத்தவ் – ராஜ் தாக்கரே எதிர்க்கின்றனர். அவர்கள் ஹிந்தி மொழியை எதிர்க்கவில்லை.

ஹிந்தி தொடர்பான தமிழகத்தின் நிலைப்பாட்டுக்கும், எங்களின் நிலைப்பாட்டுக்கும் நிறைய வித்தியாசம் உள்ளது. தமிழகத்தில் ஹிந்தி பேச மாட்டார்கள்; யாரையும் பேசவும் விட மாட்டார்கள். ஆனால், எங்களின் நிலைப்பாடு அதுவல்ல. நாங்கள் ஹிந்தி பேசுகிறோம்; ஹிந்தி திரைப்படங்களை பார்க்கிறோம்; இசையை கேட்கிறோம். மேலும், மற்றவர்கள் ஹிந்தி பேசுவதை நாங்கள் ஒருபோதும் தடுத்தது கிடையாது.

துவக்கப் பள்ளிகளில் ஹிந்தியை திணிப்பதை பொறுத்துக்கொள்ள மாட்டோம். அதற்காகத் தான் இந்த போராட்டம்.

இவ்வாறு  தெளிவுபடுத்தி உள்ளார்.