ஐதராபாத்
தெலுங்கானா அரசு தொழிலாளர்கள் பணி புரியும் நேரத்தை 10 மணியாக அதிகரித்து உத்தரவிட்டுள்ளது.

அண்மையில் தெலுங்கானாவின் அண்டை மாநிலமான ஆந்திர பிரதேசத்தில் 10 மணி நேர வேலை என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதையொட்டி தற்போது தெலங்கானாவிலும் தொழிலாளர்களின் பணி நேரத்தை 10 மணி நேரம் வரை அதிகரித்துக்கொள்ள அம்மாநில அரசு அனுமதி அளித்துள்ளது.
நேற்று தெலங்கானா அரசு பிறப்பித்துள்ள உத்தரவில்
”வணிக நிறுவனங்களில்(கடைகளுக்குப் பொருந்தாது) தொழிலாளர்களின் வேலை நேரம் நாளொன்றுக்கு 8 மணி நேரத்திலிருந்து 10 மணி நேரம் ஆக அதிகரிக்கப்படுகிறது. எனினும், வாராந்திர வேலை நேரம் ஏற்கெனவே நிர்ணயிக்கப்பட்டுள்ளதன்படி, 48 மணி நேர வரம்பை மீறாத வகையில் இருக்க வேண்டும்”
என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த உத்தரவைதெலங்கானா அரசின் ‘தொழிலாளர், வேலைவாய்ப்பு மற்றும் தொழிற்சாலைகள் துறையின்’ முதன்மைச் செயலர் பிறப்பித்துள்ளார். இந்த உத்தரவில் குறைந்தபட்சம் 6 மணி நேர வேலை நேரத்துக்கிடையில் 30 நிமிட இடைவெளி தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.