சென்னை
இன்று முதல்வர் மு க ஸ்டாலின் சென்னையில் 120 மின்சார பேருந்துகள் சேவையை தொடங்கி வைக்கிறார்.
எரிபொரு
ள் செலவை கட்டுப்படுத்தும் வகையிலும், காற்று மாசுபாட்டை கணிசமாக குறைக்கும் வகையிலும்,சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் பயணிகளுக்கு கூடுதல் வசதி வழங்க தாழ்தள மின்சார பேருந்துகளை இயக்க முடிவு செய்து அதன்படி உலக வங்கி உதவியுடன் மொத்த விலை ஒப்பந்தத்தின்படி (ஜி.சி.சி.) ஆயிரத்து 225 மின்சார தாழ்தள பஸ்களை வாங்க முடிவு செய்யப்பட்டது.
முதல்கட்டமாக 625 மின்சார பஸ்களுக்கான ஒப்பந்தமானது அசோக் லேலண்ட் நிறுவனத்தின் துணை நிறுவனமான ‘ஓம் குளோபல் மொபிலிட்டி’ நிறுவனத்துடன் போடப்பட்டு இவற்றில் 400 பேருந்துகள் ஏ.சி. அல்லாத பேருந்துகளும், 225 ஏ.சி. பேருந்துகளும் அடங்கும்.
இந்த 625 தாழ்தள மின்சார பேருந்துகளில் முதல் கட்டமாக 120 மின்சார பேருந்துகளை முதல்வசர் மு.க.ஸ்டாலின் இன்று (திங்கட்கிழமை) காலை 10.30 மணியளவில் சென்னை வியாசர்பாடி பணிமனையில் நடைபெற உள்ள விழாவில் தொடங்கி வைக்கிறார்.