பெங்களூரு

நேற்றைய ஐபிஎல் கிரிக்கெட் மேட்சில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு 11 இளைஞர்கள் உயிரிழந்தது குறித்து சித்தராமையா விளக்கம் அளித்துள்ளார்.

நேற்று  ஐ.பி.எல். தொடரின் இறுதிப்போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் விளையாடி பஞ்சாப் அணியை 6 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி பெங்களூரு அணி வெற்றி பெற்று, முதன்முறையாக சாம்பியன் பட்டமும் வென்றுள்ளது. பெங்களூரு அணிக்க் அணிக்கு கர்நாடக முதல்வ்ச்ட் சித்தராமையா பாராட்டுகளை தெரிவித்து கொண்டார்.

பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியம் அருகே நடந்த வெற்றி கொண்டாட்டத்தின்போது, eஎற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் பலியாகி பலர் காயமடைந்தனர். இந்த வெற்றி பேரணி சோகத்தில் முடிந்தது பற்றி சித்தராமையா, விசாரணைக்கு உத்தரவிட்டு உள்ளார். அவருடைய அரசு உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு அறிவித்து உள்ளது.

கர்நாடக முதல்வ்ச்ட் சித்தராமையா

“35 ஆயிரம் பேர் கூட கூடிய இடத்தில் லட்சக்கணக்கானோர் கூடினர். இந்த அதிக அளவிலான மக்கள் கூட்டமே, நெரிசல் ஏற்பட காரணம் சின்னசாமி ஸ்டேடியத்திற்கு வெளியே 2 முதல் 3 லட்சம் பேர் கூடி விட்டனர்.   இது ஒரு மிக பெரிய சோகம். கூட்ட நெரிசலில் மக்கள் உயிரிழந்து உள்ளனர்.

நான் மருத்துவமனைக்கு நேரில் சென்றேன். இதுபோன்ற சம்பவம் ஒருபோதும் நடக்க கூடாது. இதற்காக அரசு ஆழ்ந்த வருத்தம் தெரிவிக்கிறது என்றார். உயிரிழந்தவர்களில் பலரும் இளைஞர்கள். இதில் அரசியல் விளையாட்டை விளையாட நான் விரும்பவில்லை”

என்று கூறியுள்ளார்.