டெல்லி: முதுநிலை மருத்துவ படிப்புக்கான நீட் முதுநிலை தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக என்டிஏ அறிவித்து உள்ளது. உச்சநீதிமன்றம் ஒரே ஷிப்டில் தேர்வை நடத்த வேண்டும் என உத்தரவிட்ட நிலையில், தேர்வு ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான தேசிய நுழைவுத் தேர்வான நீட் முதுநிலை தேர்வு ஜுன் 15 ஆம் தேதி நடைபெறுவதாக இருந்தது. இதற்கிடையில், தேர்வை ஒரே ஷிப்டில் நடத்த வேண்டும் என மாணவர்கள் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு போடப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், பல்வேறு கட்ட விசாரணைக்கு பிறகு, இந்த விஷயத்தில், மருத்துவ வாரியம் தன்னிச்சையாக எந்த முடிவும் எடுக்க கூடாது என்று உச்ச நீதிமன்றம் கூறியது. மேலும், ஒரே ஷிப்ட்டில் தேர்வு நடத்த வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்தது.
முன்னதாக, வரும் 15 ஆம் தேதி 2 கட்டங்களாக நடைபெற இருந்த நீட் முதுநிலை தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக தேசிய தேர்வு முகமை அறிவிதிருந்தது. விசாரணையின்போது ஒரே ஷிப்டில் தேர்வை நடத்த வேண்டுமென்றால், கால அவகாசம் தேவை என என்டிஏ கோரியது. இதை ஏற்று, அவகாசம் எடுத்துக்கொண்டு, ஒரே ஷிப்டில் தேர்வினை நடத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
அதைத்தொடர்ந்து, தேர்வு மையங்களில் உள்கட்டமைப்பு வசதி செய்து, ஒரே ஷிப்டில் தேர்வு நடத்த கால அவகாசம் தேவை என்பதால் தேர்வு ஒத்தி வைக்கப்படுவதாக அறிவித்துள்ளது. மேலும் புதிய தேர்வு அட்டவணை விரைவில் வெளியிடப்படும் என்றும் தேசிய தேர்வுகள் முகமை கூறியுள்ளது.
முதுநிலை நீட் தேர்வு ஒரே ஷிப்டில் நடத்தப்பட வேண்டும்! உச்சநீதிமன்றம் உத்தரவு