டெல்லி

ந்திய ராணுவம் அடுத்த தலைமுறைக்கான பாதுகாப்பு தொழில்நுட்ப சோதனை நடத்த உள்ளது/

 

தற்போது நாடு முழுவதும் உள்ள முக்கிய இடங்களில் இந்திய ராணுவம் விரிவான திறன் மேம்பாட்டு செயல் விளக்கங்களை மேற்கொண்டு வருகிறது. இதில் அடுத்த தலைமுறைக்கான பாதுகாப்பு தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படுகிறது. இது பொக்ரான், பாபினா மற்றும் ஜோஷிமத் துப்பாக்கிச் சூடு களங்களிலும் நடக்கிறது.

மேலும் ஆக்ரா மற்றும் கோபால்பூரில் வான் பாதுகாப்பு உபகரண செயல் விளக்கங்களுக்கும் திட்டமிடப்பட்டு இந்த கள சோதனைகள் போர் நிலைமைகளின் கீழ் நடத்தப்படுகின்றன. அதிநவீன பாதுகாப்பு அமைப்புகளின் செயல்திறனை கடுமையாக மதிப்பிடுவதற்கு மின்னணு போர் உருவகப்படுத்துதல்களை ஒருங்கிணைக்கின்றன. இதனை ராணுவத்தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி, ஏற்கனவே மதிப்பாய்வு செய்திருந்தார்.

இச்சோதனைகள் இந்திய ராணுவத்தின் ‘மாற்றத்தின் தசாப்தம்’ என்ற திட்டத்துக்கான ஒரு குறிப்பிடத்தக்க படியைக் குறிக்கின்றன என்றும், வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களை விரைவாக உள்வாங்குவதை உறுதி செய்வதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளன என்றும் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.