ஜூன் 7ல் தமிழ்நாட்டில் பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்த அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது, சென்னையில் இன்று துல் ஹஜ் பிறை காணப்பட்டதை அடுத்து நாளை துல் ஹஜ் மாத முதல் பிறை என்று ஷரியத் முறைப்படி நிச்சயிக்கப்பட்டிருக்கிறது.

ஆகையால் வரும் ஜூன் 7ம் தேதி பக்ரீத் கொண்டாடப்படும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்களால் ஈகைத் திருநாள் எனப்படும் பக்ரீத் பண்டிகை ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது.
இஸ்லாமியர்களின் ஐந்து முக்கிய கடமைகளில் புனித ஹஜ் செல்வது அதை இந்த பக்ரீத் பண்டிகையினையொட்டிதான் நிறைவேற்றப்படுகின்றது.
மேலும் தியாகத்தை உணர்த்தும் வகையிலும் ஏழை எளியவர்களுக்கு உதவிடும் நோக்கத்திலும் இந்த பண்டிகையினை இஸ்லாமியர்களால் கொண்டாடப்படுகிறது.