டெல்லி

கொலிஜியம் உச்சநீதிமன்றத்துக்கு 3 நீதிபதிகளை பரிந்துரை செய்துள்ளது.

சமீபத்தில் முன்னாள் தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா மற்றும் நீதிபதிகள் அபய் எஸ் ஓகா மற்றும் பேலா திரிவேதி ஆகியோர் ஓய்வு பெற்றதனையடுத்து உச்சநீதிமன்றம் மூன்று காலியிடங்களுடன் தற்போது 31 நீதிபதிகள் கொண்டு செயல்பட்டு வருகிறது.

இந்திய தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான கொலீஜியம் உயர்நீதிமன்ற நீதிபதிகள் மூவரை உச்சநீதிமன்ற நீதிபதிகளாக பரிந்துரை செய்துள்ளது.

இவ்வாறு உச்சநீதிமன்றத்துக்கு பதவி உயர்வு பெற கொலீஜியம் பரிந்துரைத்த மூன்று நீதிபதிகள்

குஜராத்தைச் சேர்ந்த நீதிபதி என்.வி.அஞ்சாரியா – தற்போது கர்நாடக ஐகோர்ட்டின் தலைமை நீதிபதி

ராஜஸ்தானைச் சேர்ந்த நீதிபதி விஜய் பிஷ்னோய் – தற்போது கவுகாத்தி ஐகோர்ட்டின் தலைமை நீதிபதி

மகராஷ்டிராவைச் சேர்ந்த நீதிபதி அதுல் எஸ்.சந்துர்கர் – தற்போது மும்பை ஐகோர்ட்டின் நீதிபதி

ஆவார்கள்

இந்த பரிந்துரைகள் அங்கீகரிக்கப்பட்டால், உச்சநீதிமன்றம் அதன் முழு அனுமதிக்கப்பட்ட 34 நீதிபதிகள் எண்ணிக்கையுடன் செயல்படும் என்பது குறிப்பிடத்தக்கதாகு