சென்னை

திருப்பூர் வழியாக ஐதராபாத் – கொல்லம் இடையே சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது/

தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

”வரும் மே 31 ஜூன் 7,14,21,28 ஆகிய தேதிகளில் ஐதராபாத்தில் இருந்து இரவு 11.10 மணிக்கு புறப்பட்டு கொல்லம் செல்லும் சிறப்பு ரயில் (வண்டி எண்.07193), காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், போத்தனூர் வழியாக புறப்பட்டதில் இருந்து 3-வது நாள் காலை 7.10 மணிக்கு கொல்லம் சென்றடையும்.

மறுமார்க்கமாக, கொல்லத்தில் இருந்து வரும் 26, ஜூன் 2,9,16,23,30 ஆகிய தேதிகளில் காலை 10.45 மணிக்கு புறப்பட்டு ஐதராபாத் செல்லும் சிறப்பு ரயில் (07194), இதே வழித்தடம் வழியாக மறுநாள் மாலை 5.30 மணிக்கு ஐதராபாத் சென்றடையும்.

என்று கூறப்பட்டுள்ளது.