டெல்லி

இந்திய ரிசர்வ் வங்கி தங்க நகைக்கடன்கள் வழங்க புதிய கட்டுப்பாடுகள் விதித்துள்ளது/

ஏழைகளை பொறுத்த வரை தங்க நகை என்பது அவசர காலத்தில் அடகு வைக்க உதவும் ஒரு பொருளாகத்தான் உள்ளது.  பல மத்திய தர குடும்பங்களிலும் இதே நிலை நிலவுகிறது.  தங்க நகை இருப்பவர்கள் இதனால் ஓரளவு நிம்மதியுடன் உள்ளனர்.

அந்த நிம்மதிக்கு பேரிடியாக இந்திய ரிசர்வ் வங்கி இன்று வங்கிகள், நிதிநிறுவனங்கள் தங்க நகைக்கடன் வழங்க புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது இந்திய ரிசர்வ் வங்கி. 9 புதிய கட்டுப்பாடுகளை விதித்து வெளியிட்ட அறிவிப்பால் நகை கடன் பெறுவோர் அதிர்ச்சி அடைந்தள்ளனர்.

அதாவது அடகு வைக்கும் தங்க நகையின் மதிப்பில் 75 சதவீத தொகை மட்டுமே கடனாக வழங்க வேண்டும் என்றும் அடகு வைப்பவர்கள், அந்த நகைக்கு தாங்கள்தான் உரிமையாளர் என்ற ஆவணத்தை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளதால் மக்கள் மிகவும் துயரடைந்துள்ளனர்.