ர்டோலி

நேற்று டெல்லி ராஜதானி எக்ஸ்பிரஸ் ரயிலை கவிழ்க்க நடந்த சதி முறியடிக்கப்பட்டுள்ளது.

நேற்று தலைநகர் டெல்லியில் இருந்து அசாமின் திப்ருகட் பகுதிக்கு நேற்று ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயில் சென்றுகொண்டிருந்தது. அந்த ரயில் உத்தரபிரதேசத்தின் ஹர்டோலி மாவட்டம் உமர்தாலி பகுதியில் சென்றபோது தண்டவாளத்தில் மரப்பலகை வைக்கப்பட்டிருந்ததை ரயில் ஓட்டுநர் (லோகோ பைலட்) கண்டார்.

அவர் உடனடியாக ரயிலை நிறுத்தி விட்டு தண்டவாளத்தில் இறங்கி நடந்து சென்று பார்த்தபோது அதில் இரும்பு கம்பியால் மரப்பலகை கட்டப்படிருந்ததை கண்டுபிடித்தார்.அவர் இதுகுறித்து ரயில்வே அதிகாரிகளுக்கு உடனடியாக தகவல் கொடுத்தார்.

விரைந்து வந்த அதிகாரிகள் தண்டவாளத்தில் வைக்கப்பட்டிருந்த மரப்பலகையை அகற்றினர். இந்த சம்பவத்தில் ஈடுபட்டது யார்? ரெயிலை கவிழ்க்க சதி திட்டம் தீட்டப்பட்டதா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மரப்பலகை அகற்றப்பட்டதும் எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்டு சென்றது.