தோகா: தோகாவில் நடைபெற்ற ஈட்டி எறிதலில் இந்திய வீரரும் ஒலிம்பிக் வின்னருமான, நீரஜ் சோப்ரா 90.23 மீட்டர் தூரம் எறிந்து புதிய சாதனை படைத்தார். இதன் காரண மாக, 90 மீட்டர் தூரம் எறிந்த 3-வது ஆசிய வீரர் என்ற பெருமையை நீரஜ் சோப்ரா பெற்றார்.
தோஹா (Doha) என்பது கத்தாரின் தலைநகரம் ஆகும். கத்தாரில் உள்ள மிகப்பெரிய நகரமும், நாட்டின் பெரும்பான்மை மக்கள் வசிக்கும் இடமும் இதுவே. பாரசீக வளைகுடாவின் கரையில் அமைந்துள்ள இந்நகரம், நாட்டின் பொருளாதாரம் மற்றும் கலாச்சார மையமாகவும் விளங்குகிறது. இங்கு, 16-வது டைமண்ட் லீக் தடகள போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டிகள் கடந்த ஏப்ரல் மாதம் 26-ந் தேதி தொடங்கி நிலையில், ஆகஸ்ட் 28-ந்தேதி வரை நடைபெறுகிறது.
15 சுற்றுகளை கொண்ட இந்த தொடரின் 3-வது சுற்று கத்தார் தலைநகர் தோகாவில் நேற்று (மே 16ந்தேதி) நடைபெற்றது. ஈட்டி எறிதலில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா 90.23 மீட்டர் தூரம் எறிந்து புதிய சாதனை படைத்தார். அவர் முதல் முறையாக 90 மீட்டருக்கு மேல் எறிந்து புதிய வரலாறு நிகழ்த்தினார். தோஹா டயமண்ட் லீக்கில் 90.23 மீட்டர் எறிதலுடன் நீரஜ் சோப்ரா புதிய சாதனை படைத்தார். தனது வாழ்க்கையில் முதல் முறையாக 90 மீட்டர் தூரத்தை எட்டினார். ஒலிம்பிக் சாம்பியன் நீரஜ் சோப்ரா 2025 தோஹா டயமண்ட் லீக்கில் ஒரு வரலாற்று மைல்கல்லை எட்டினார், சர்வதேச போட்டியில் 90 மீட்டர் தூரத்தை எட்டிய முதல் இந்தியர் ஆனார்.
இதற்கு முன்பு 2022 ஸ்டாக் ஹோம் டைமன்ட் லீக் போட்டியில் 89.94 மீட்டர் தூரம் எறிந்ததே அவரது சிறப்பான நிலையாக இருந்தது. 90 மீட்டர் தூரம் எறிந்த 3-வது ஆசிய வீரர் என்ற பெருமையை நீரஜ் சோப்ரா பெற்றார். இதற்கு முன்பு இந்த இலக்கை எட்டிய மற்ற இரண்டு ஆசிய வீரர்கள் ஒலிம்பிக் சாம்பியனான பாகிஸ்தானின் அர்ஷத் நதீம் (92.97 மீ.) மற்றும் சீன தைபேயின் சாவோ-சுன் செங் (91.36 மீ.) ஆவார்கள்.
தோஹா டயமண்ட் லீக்கில் 90.23 மீட்டர் எறிதலுடன் நீரஜ் சோப்ரா புதிய சாதனை படைத்தார் நீரஜ் சோப்ரா தனது வாழ்க்கையில் முதல் முறையாக 90 மீட்டர் தூரத்தை எட்டினார். ஒலிம்பிக் சாம்பியன் நீரஜ் சோப்ரா 2025 தோஹா டயமண்ட் லீக்கில் ஒரு வரலாற்று மைல்கல்லை எட்டினார், சர்வதேச போட்டியில் 90 மீட்டர் தூரத்தை எட்டிய முதல் இந்தியர் ஆனார்.இந்த தனிப்பட்ட சிறந்த சாதனை இருந்தபோதிலும், அவர் ஜெர்மனியின் ஜூலியன் வெபருக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தைப் பிடித்தார், அவர் 91.06 மீட்டர் எறிதலுடன் வென்றார்.
சர்வதேச அளவில் 25-வது வீரர் ஆவார். 90.23 மீட்டர் எறிந்தாலும் நீரஜ் சோப்ராவால் 2-வது இடத்தையே பிடிக்க முடிந்தது. ஜெர்மனியின் ஜூலியன் வெபர் 91.06 மீட்டர் தூரம் எறிந்து முதலிடம் பிடித்தார். கிரனடாவின் ஆண்டர்சன் பீட்டர்ஸ் 85.64 மீட்டர் தூரம் எறிந்து 3-வது இடம் பிடித்தார். மற்றொரு இந்திய வீரர் ஜெனோ கிஷோர் 78.60 மீட்டர் தூரம் எறிந்து 8-வது இடத்தை பிடித்தார்.
தோஹா டயமண்ட் லீக்கில் 90.23 மீட்டர் எறிதலுடன் நீரஜ் சோப்ரா புதிய சாதனை படைத்தார் நீரஜ் சோப்ரா தனது வாழ்க்கையில் முதல் முறையாக 90 மீட்டர் தூரத்தை எட்டினார். ஒலிம்பிக் சாம்பியன் நீரஜ் சோப்ரா 2025 தோஹா டயமண்ட் லீக்கில் ஒரு வரலாற்று மைல்கல்லை எட்டினார், சர்வதேச போட்டியில் 90 மீட்டர் தூரத்தை எட்டிய முதல் இந்தியர் ஆனார்.இந்த தனிப்பட்ட சிறந்த சாதனை இருந்தபோதிலும், அவர் ஜெர்மனியின் ஜூலியன் வெபருக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தைப் பிடித்தார், அவர் 91.06 மீட்டர் எறிதலுடன் வென்றார்.
புதிய சாதனை குறித்து கூறிய நீரஜ் சோப்ரா, 90 மீட்டரை தாண்டியது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. இது ஒரு சிறந்த அனுபவமாகும். பயிற்சியாளர் 90 மீட்டர் இலக்கை எட்ட முடியும் என்று என்னிடம் கூறினார். இந்த இலக்கை தொட எனக்கு காற்று உதவியாக இருந்தது‘ என்று கூறினார்.
தற்போது 27 வயதாகும், நீரஜ் சோப்ரா 2 முறை உலக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார். டோக்கியோ ஒலிம்பிக்கில் (2021) தங்கப் பதக்கமும், பாரீஸ் ஒலிம்பிக்கில் (2024) வெள்ளிப் பதக்கமும் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஈட்டி எறிதலில் புதிய சாதனை நிகழ்த்திய நீரஜ் சோப்ராவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்து உள்ளார். இதுகுறித்து பிரதமர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், இது ஒரு அற்புதமான சாதனை. தோகா டைமன்ட் ‘லீக்’ போட்டியில் 90 மீட்டரை தாண்டி எறிந்ததற்காகவும், தனது சிறந்த நிலையை எட்டியதற்காகவும் நீரஜ் சோப்ராவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இது அவரது இடைவிடாத அர்ப்பணிப்பு, ஒழுக்கம் மற்றும் ஆர்வத்தின் விளைவாகும். அவரால் இந்தியா மகிழ்ச்சி அடைந்து பெருமை கொள்கிறது.