டெல்லி

ன்று வெளியான சி பி எஸ் இ 10 வகுப்பு தேர்வு முடிவில் மாணவிகள் அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

நாடு முழுவதும் மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (சிபிஎஸ்இ) கீழ் உள்ள பள்ளிகளில் படித்த 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நடப்பு கல்வியாண்டுக்கான பொது தேர்வு கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கி, மார்ச் மாதம் முடிவடைந்தது. மேலும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வு ஏப்ரலில் முடிவடைந்தது.

இன்று சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது.  மொத்தம் 93.60% மாணவர்கள் பொதுத் தேர்வுகளில் தேர்ச்சி பெற்று தேர்ச்சி சதவீதம் கடந்த ஆண்டை விட 0.06% அதிகரித்துள்ளது.

இந்த வருடமும் மாணவிகள் 95% பேர் தேர்ச்சி பெற்று மாணவர்களைவிட 2.37%-த்துடன் முன்னணியில் உள்ளனர். சென்னை மண்டலத்தில் பத்தாம் வகுப்புத் தேர்வெழுதிய 98.71 % பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இன்று வெளியாகியுள்ள சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை cbseresults.nic.in, result.cbse.nic.in, cbse.gov.in ஆகிய இணையதளங்களின் வாயிலாக மாணவர்கள் அறிந்துகொள்ளலாம்.