டெல்லி

பிரதமர் மோடிக்கு  காங்கிரஸ் மூத்த தலைவர் ப சிதம்பரம் பாராட்டு தெரிவித்துள்ளார்.

கடந்த 4 நாட்களாக இந்தியா – பாகிஸ்தான் இடையே நீடித்து வந்த போர்பதற்றம் முடிவுக்கு வந்ததுள்ளது. இந்திய எல்லையில் அத்துமீறி தாக்குதல் நடத்த முயற்சித்த பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி கொடுத்ததால், இருநாடுகளுக்கும் இடையே போர் பதற்றம் ஏற்பட்டு. நூற்றுக்கணக்கான டிரோன்களை ஏவிய பாகிஸ்தான், பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளை குறிவைத்து தாக்குதல் நடத்த முயற்சித்தது. எனவே, எல்லையோர மாநிலங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு மக்கள் வீடுகளுக்குள்ளேயே இருக்க அறிவுறுத்தப்பட்டனர்.

பாகிஸ்தானின் ராணுவ உயர் அதிகாரிகள், இந்திய ராணுவ உயர் அதிகாரிகளுடன் சமரச பேச்சுவார்த்தை நடத்த முன்வந்தனர். இருநாட்டு முக்கிய அதிகாரிகளும் தொலைபேசியில் தொடர்ந்து பேசிய பின்னர் சிறிது நேரத்தில் போர் நிறுத்தம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது

இதையொட்டி பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் பாராட்டு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ப.சிதம்பரம் உயிரிழப்புகள் மேலும் ஏற்படாமல் தடுப்பதற்கு தேவையான மற்றும் அறிவார்ந்த நடவடிக்கை என்று பிரதமர் மோடிக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.