ஸ்ரீநகர்

பாகிஸ்தானுடன் போர் நிறுத்தம் ஏற்படாலும் இந்தியா தனது படைகளை தயார் நிலையில் வைத்துள்ளது.

.

கடந்த 4 நாட்களாக இந்தியா, பாகிஸ்தான் இடையே எல்லையில் உச்ச கட்ட பதற்றம் ஏற்பட்டு இந்தியாவும் தக்க பதிலடியை மூர்க்கமாக கொடுத்தது. இந்த தாக்குதலில் பாகிஸ்தானில் உள்ள ரபிகுய், முரிட் சக்லலா, ராம்கியார் கான், சுக்குர், சுனியன் உள்பட 8 ராணுவ நிலைகளை இந்திய ராணுவம் தாக்கியது. எனவே பாகிஸ்தான் பணிந்தது.

இவ்வாறு மோதல் ஒருபக்கம் நடந்து வந்த நேரத்தில் பாகிஸ்தானின் ராணுவ உயர் அதிகாரிகள், இந்திய ராணுவ உயர் அதிகாரிகளுடன் சமரச பேச்சுவார்த்தை நடத்த முன்வந்தனர். இதில் சில முன்னேற்றங்கள் ஏற்பட்டதால், அதுபற்றிய தகவல் பிரதமர் மோடிக்கு தெரிவிக்கப்பட்கு அவர் ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங், முப்படை தளபதிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

இருநாட்டு முக்கிய அதிகாரிகளும் தொலைபேசியில் தொடர்ந்து பேசிய்ச்தையடுத்து நேற்று மாலை 5 மணியளவில் போர் நிறுத்தம் அமலுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டது.

நேற்று பிற்பகல் .பாகிஸ்தானின் பாதுகாப்புத்துறை இயக்குனர் இந்திய பாதுகாப்புத்துறை இயக்குனருடன் தொலைபேசியில் பேசியபோது இரு தரப்பினரும் தரை, வான் மற்றும் கடல் வழியாக அனைத்து துப்பாக்கிச் சூடுகளையும், ராணுவ நடவடிக்கைகளையும் நிறுத்துவார்கள் என்று அவர்களுக்கு இடையே உடன்பாடு ஏற்பட்டது, ஆகவே நேற்று மாலை 5 மணி முதல் இந்த தாக்குதல் நிறுத்தம் அமலுக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டது.

ஆயினும் இந்த போர் நிறுத்த அறிவிப்பை மீறி எல்லையில் பாகிஸ்தான் மீண்டும் அடாவடியாக நேற்று இரவு 9 மணிக்குமேல். காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகர், ஆக்னூர், பிர்பாஞ்சால் ஆகிய பகுதிகளில் இரவு 9 மணிக்கு மேல் டிரோன் மற்றும் ஏவுகணை தாக்குதலை தொடங்கியது. இந்திய ராணுவத்தினர் திருப்பி அடிக்கத்தொடங்கினர்.

இந்தியப்படையினர் பாகிஸ்தானின் அத்தனை டிரோன்களையும் நடுவானிலேயே தாக்கி அழித்ததையடுத்து இரவில் பாகிஸ்தான் தனது தாக்குதலை நிறுத்திக்கொண்டது. தற்போது எல்லையில் ஓரளவு பதற்றம் தணிந்துள்ளது. இருந்தாலும், எல்லைக்கட்டுப்பாட்டு பகுதியில் இந்திய உன்னிப்பாக சூழலை கண்காணித்து வருகிறது. மீண்டும் பாகிஸ்தான் தரப்பில் இருந்து மீண்டும் அத்துமீறினால் தக்க பதிலடி கொடுக்க  இந்தியா தனது படைகளை தயார் நிலையில் வைத்துள்ளது,’