டெல்லி
மத்திய அரசு 16 பொதுமக்களை பலி கொண்ட பாகிஸ்தான் தாக்குதலுக்கு பதிலடி அளிக்க இந்தியா தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளது.

காஷ்மீரில் பஹல்காம் தாக்குதலில் ஏற்பட்ட இழப்புக்கு இந்தியா ஆபரேசன் சிந்தூர் என்ற பெயரில், பாகிஸ்தான் பயங்கரவாத முகாம்களில் ஏவுகனை தாக்குதல் நடத்தியதில் 100 பயங்கரவாதிகள் உயிரிழந்திருக்கலாம் என பாதுகாப்புதுறை அமைச்சர் ராஹ்நாத் சிங் தெரிவித்துள்ளார். இதில் சில பொது மக்கள் உயிரிழந்ததாக பாகிஸ்தான் தெரிவித்ததற்கு இந்தியா மறுப்பு தெரிவித்து பயங்கரவாத முகாம்களில் மட்டும் தாக்குதல் நடத்தியதாக தெரிவித்தது.
ஆபரேசன் சிந்தூருக்கு பதில் தரும் வகையில் பாகிஸ்தானும் எல்லையில் தாக்குதல் நடத்தியதில் ஹரியான மாநிலம் பல்வால் மாவட்டத்தைச் சேர்ந்த 32 வயதான ராணுவ வீரர் லான்ஸ் நாயக் தினேஷ் குமார் உயிரிழந்தார். மேலும் இந்த தாக்குதலில் பலர் உயிரிழந்ததாக செய்திகள் வெளியாகின. பாகிஸ்தான் நடத்திய தாக்குதல் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
அந்த அறிவிப்பில்,
நேற்றிரவு இந்தியாவின் அவந்திபுரா, ஸ்ரீநகர், ஜம்மு, பதான்கோட், அமிர்தசரஸ், கபுர்தலா, ஜலந்தர், லூதியானா, ஆதம்பூர், பதிண்டா, சண்டிகர், நல், பலோடி, உத்தர்லாய் மற்றும் பூஜ் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ராணுவ இலக்குகளை குறிவைத்து பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதல் நடத்தியத்
இந்த ட்ரோன் தாக்குதலை Counter UAS Grid என்ற நவீன பாதுகாப்பு கருவியை கொண்டு தடுக்கப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீரில் உள்ள குப்வாரா, பாரமுல்லா, உரி, பூஞ்ச், மெந்தர் மற்றும் ரஜோரி ஆகிய பகுதிகளில் பாகிஸ்தான் துப்பாக்கி, மோர்டார், கனரக பீரங்கிகளை பயன்படுத்தி தாக்குதல் நடத்தியதில் மூன்று பெண்கள் மற்றும் ஐந்து குழந்தைகள் உட்பட 16 அப்பாவி மக்கள் உயிரிழந்த்ள்ளனர். இந்த செயலுக்கு பதிலடி கொடுக்க இந்தியா தயாராக உள்ள்து’
எனக் கூறப்பட்டுள்ளது.