டெல்லி

ந்தியாவில் பாகிஸ்தான் நடிக நடிகையர் இன்ஸ்டாகிராம் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன

காஷ்மீரின் பஹல்காம் பைசரன் பள்ளத்தாக்கில் கடந்த 22ஆம் தேதி நடந்த பயங்கரவாத தாக்குதலில் சுற்றுலாப் பயணிகள் 26 பேர் கொல்லப்பட்டதை தொடர்ந்து இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவி வருகிறது.

இந்த தாக்குதலுக்கும், தங்களுக்கும் சம்பந்தமில்லை எனவும், நியாயமான மற்றும் நடுநிலையான எந்த விசாரணைக்கும் தயார் என பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார்.

இரு நாடுகளுக்கிடையேயான பல ஒப்பந்தங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதிலும் குறிப்பாக சிந்து நதிநீர் ஒப்பந்தம், சிம்லா ஒப்பந்தம் போன்றவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

மேலும் இந்திய விமானங்கள் பாகிஸ்தான் வான் பரப்பிலும், பாகிஸ்தான் விமானங்கள் இந்திய வான்பரப்பிலும் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலு இந்திய அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

பாகிஸ்தான் நடிகர்கள் மற்றும் நடிகைகள் பலரின் சமூக வலைத்தளப் பக்கங்கள் இந்தியாவில் முடக்கப்பட்டுள்ளன. குறிப்பாக ஹனியா அமிர் மற்றும் மஹிரா கான் உட்பட பல பாகிஸ்தான் நடிகர்களின் இன்ஸ்டாகிராம் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.