டெல்லி: பயங்கரவாத தாக்குதல் மீண்டும் நடைபெறும் வாய்ப்பு உள்ளதால், ஜம்மு – காஷ்மீரின் சுற்றுலாத் தலங்களை மூட மத்தியஅரசு உத்தரவிட்டது. அதன்படி, சுமார் 48 சுற்றுலா தலங்கள் மூடப்பட்டு உள்ளது.

மினி சுவிட்சர்லாந்து என்று அழைக்கப்படும்,  ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் சுற்றுலாத்தலத்தில் ஏராளமானோர் குழுமியிருந்து இயற்கையை ரசித்து வந்த நேரத்தில், அங்கு இந்திய ராணுவ உடையுடன் வந்த பாகிஸ்தான்  பயங்கரவாதிகள் கடந்த (ஏப்ரல்) 22-ம் தேதி சுற்றுலா பயணிகள், குறிப்பாக இந்து பயணிகளை சுட்டுக் கொன்றனர்.  இந்த நிகழ்வில் மொத்தம் 2 6+2 என மொத்தம் 28  பேர் கொல்லப்பட்ட நிலையில், 20க்கும் மேற்பட்டோர் பலத்த காயத்துடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானில் இருந்து செயல்படும் லஷ்கர்-இ-தொய்பா என்ற தீவிரவாத இயக்கம்தான் காரணம் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பாகிஸ்தான் உளவுத் துறையின் தூண்டுதலின்பேரில் இந்த தாக்குதல் நடந்ததாக சந்தேகம் எழுந்துள்ளது.  இதையடுத்து  காஷ்மீரில் உள்ள பயங்கரவாதிகளை ராணுவம் தேடி வருகிறது. மேலும்,  பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாதிகளின் முகாம்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்த திட்டமிட்டு வருகிறது.  மேலும் பாகிஸ்தான் ராணுவம் மற்றும் பயங்கரவாதிகளின் நடவடிக்கை குறித்து உளவுத்துறை தீவிரமாக கண்காணித்து வருகிறது.

இதைத்தொடர்ந்து, ஜம்மு காஷ்மீரில் மீண்டும்  பயங்கரவாத தாக்குதல்கள் நடத்த பயங்கரவா அமைப்புகள் திட்டமிட்டு இருப்பதாக  உளவுத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனைத் தொடர்ந்து, காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதிகளில் உள்ள 48 சுற்றுலாத் தலங்களை அம்மாநில அரசு  மூட மத்தியஅரசு அறிவுறுத்தியது. இதையடுத்து, அந்த சுற்றுலா தலங்கள் மூடப்பட்டுஉள்ளது.

காஷ்மீர் பள்ளத்தாக்கில் மக்களோடு மக்களாக கலந்திருக்கும் சில பயங்கரவாதிகள் (ஸ்லீப்பர் செல்கள்) மீண்டும் தாக்குதல்களை நடத்த  சதித்திட்டங்களில் இறங்கியுள்ளதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது. ஸ்ரீநகர் மற்றும் காந்தர்பால் மாவட்டங்களில் காஷ்மீர் பண்டித்களை குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், ரயில்வே உள்கட்டமைப்பை தகர்க்கவும், வெளியூர் ரயில்வே ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இதையடுத்து ரயில்வே ஊழியர்கள் முகாமைவிட்டு வெளியேற வேண்டாம் என்று பாதுகாப்புப் படையினர் அறிவுறுத்தியுள்ளனர். அதேபோல், பயங்கரவாதிகளால் பாதிப்புக்குள்ளாக வாய்ப்புள்ள பகுதிகளை கண்டறிந்து பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளனர்.