ஷில்லாங்
நேற்று இரவு மேகாலயாவில் 2.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

நேற்று இரவு மேகாலயாவில் உள்ள கிழக்கு காரோ மலைப் பகுதியில் திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது.
நேர்று இரவு 9.28 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 2.8 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
சுமார் 5 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 25.64 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 90.68 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டது.
இதுவரை இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்பு குறித்து எந்தவித தகவலும் வெளியாகவில்லை.
Patrikai.com official YouTube Channel