டெல்லி
பி ஆர் கவாய் உச்சநீதிமன்றத்தின் 52 ஆவது தலைமை நீதிபதியாக பதவி ஏற்க உள்ளார்.

தற்போதைய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா, நீதிபதி பூஷன் ராமகிருஷ்ண கவாயை அடுத்த தலைமை நீதியதியாக்க பரிந்துரைத்து, அவரது பெயரை மத்திய சட்ட அமைச்சகத்தின் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்துள்ளார். இதனால் பி.ஆர்.கவாய் இந்தியாவின் 52வது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாகவுள்ளார்.
கடந்த 2024-ஆம் ஆண்டு நவம்பரில் பதவியேற்ற உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கண்ணாவின் பதவிக்காலம் வரும் மே 13-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. எனவே, குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு பிறகு, உச்ச நீதிமன்றத்தின் 52-வது தலைமை நீதிபதியாக பி.ஆர்.கவாய் மே 14-ஆம் தேதி பொறுப்பேற்க உள்ளார்.
கடந்த 2007 ஆம் ஆண்டு நாட்டின் உயர் நீதித்துறை பதவிக்கு உயர்த்தப்பட்ட நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணனுக்குப் பிறகு, பட்டியலின சமூகத்தை சேர்ந்த இரண்டாவது தலைமை நீதிபதியாகிறார் பி.ஆர். கவாய் உள்ளார்.