திருப்பதி

திருப்பதி ஏழுமலையான் கோவில் மீது டிரோன் பறந்துள்ளது கடும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நேற்று மாலை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஹரினாமா சங்கீர்த்தன மண்டபம் பகுதியில் டிரோன் பறப்பதை கண்டு அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

அந்த பகுதியில் டிரோன் பறக்கவிட்ட நபரை திருமலை-திருப்பதி தேவஸ்தான விஜிலென்ஸ் ஊழியர்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

போலீசார், அவரிடம் விசாரணை நடத்தியதில், ராஜஸ்தானை சேர்ந்த அன்ஷுமன் தரேஜா என்பது தெரியவந்தது.

திருமலை போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.