பெருசராய்
நேற்று ஒரே நாளில் பீகார் மாநிலத்தில் மின்னல் தாக்கியதில் 13 பேர் உயிரிழந்துள்ளனர்

நேற்று பீகாரி மாநிலத்தின் பல மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ததால் ஆங்காங்கே மின்னல் தாக்கி உயிரிழப்புகளை ஏற்படுத்தியது. நேற்று ஒரேநாளில் மின்னல் தாக்கியதில் 13 பேர் உயிரிழந்தனர்.
இதில் அதிகபட்சமாக பெகுசராய் மாவட்டத்தில் 5 பேர் மின்னலுக்கு பலியாகினர். தர்பங்காவில் 4 பேர், மதுபானியில் 3 பேர் மற்றும் சமஸ்திபூரில் ஒருவர் என ஒரே நாளில் 13 பேர் பலியாகி உள்ளனர்.
உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு பீகார் மாநில முதல்வர் நிதிஷ்குமார் இரங்கல் தெரிவித்ததுடன்உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று அவர் அறிவித்துள்ளார்.
மேலும் அவர் பீகார் மாநிலத்தில் பேரிடர் மேலாண்மை துறையின் அறிவுரைகளை பின்பற்றுமாறு அவர் மாநில மக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.