டெல்லி

ந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் இமயமலைக்கு  போகவேண்டாம் என பிரதம்ர் மோடி கூறி உள்ளார்/.

கடந்த 5-ந்தேதி நடைபெற்ற டெல்லி சட்டசபை தேர்தலில் மொத்தம் சுமார் 61 சதவீத வாக்குகள் பதிவாகின. தேர்தலில் பாஜக 48 இடங்களிலும், ஆளும் கட்சியாக இருந்த ஆம் ஆத்மி 22 இடங்களிலும் வெற்றி பெற்றன.  நேற்று டெல்லி முதல்வராக்ச் ரேகா குப்தா நேற்று பதவியேற்றார்.

இந்த பதவியேற்பு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா, பாஜக கூட்டணி கட்சி தலைவர்கள், பல மாநிலங்களின் முதல்வர்கள் மற்றும் துணை முதல்வர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விழாவில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, துணை முதல்வர் பவன் கல்யாண் ஆகியோரும் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

அப்போது  பிரதமர் மோடி அங்கு காவி உடையில் வந்த பவன் கல்யாணிடம் சிறிது நேரம் சிரித்து பேசியது குறித்து பவன் கல்யாணிடம் செய்தியாளர்கள் கேட்டனர்/

அதற்கு பவன் கல்யாண்,

, “வேறொன்றும் இல்லை, என்னைப் பார்த்து ‘என்ன பவன் நீங்கள் இமயமலைக்கு செல்லப் போகிறீர்களா?’ என பிரதமர் சிரித்துக்கொண்டே கேட்டார். அதற்கு நான் ‘இல்லை’ என்றேன். பிறகு அவர், அங்கு செல்ல இன்னும் வயது இருக்கிறது. மக்கள் சேவையில் கவனம் செலுத்துங்கள் என அறிவுறுத்தினார்”

என்று தெஇவித்துள்ளார்.