திருப்பதி
வரும் மார்ச் 9 முதல் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தெப்போற்சவம் ஆரம்பம் ஆகிறது.

ஒவ்வொரு ஆண்டும் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தெப்போற்சவம் நடப்பது வழக்கமாகும், இந்த ஆண்டுக்கான தெப்போற்சவம் மார்ச் 9ம் தேதி முதல் 13-ம் தேதி வரை நடக்கிறது. தினமும் இரவு 7 மணியில் இருந்து இரவு 8 மணி வரை தெப்போற்சவம் நடக்கிறது.
மார்ச் 9 அன்று சுவாமி புஷ்கரணியில் (தெப்பக்குளம்) உள்ள அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் உற்சவர்களான சீதா, ராமர், லட்சுமணர், ஆஞ்சநேயர் எழுந்தருளி 3 சுற்றுகள் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர்.
மார்ச்10 ஆம் தேதி ருக்மினி, ஸ்ரீகிருஷ்ணர் தெப்பத்தில் எழுந்தருளி 3 சுற்றுகள் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர். மார்ச் 11 ஆம் தேதி உற்சவர்களான மலையப்பசாமி, ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களுடன் எழுந்தருளி 3 சுற்றுகள் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர்.
மார்ச்12 ஆம் தேதி உற்சவர்களான மலையப்பசாமி, ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களுடன் எழுந்தருளி 5 சுற்றுகள் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர். 5-வது நாளான 13-ம் தேதி உற்சவர்களான மலையப்பசாமி, ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களுடன் எழுந்தருளி 7 சுற்றுகள் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர்.
திருப்பதி தெப்போற்சவத்தை முன்னிட்டு மார்ச் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் சஹஸ்ர தீபாலங்கார சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் மார்ச் 11, 12 மற்றும் 13-ம் தேதிகளில் ஆர்ஜித பிரம்மோத்ஸவம் மற்றும் சஹஸ்ர தீபாலங்கார சேவையை தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது.