டெல்லி: டெல்லி சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் பாஜக முன்னிலையில் தொடர்ந்து வருகிறது. அதை தொடர்ந்து, ஆம்ஆத்மி கட்சியும் வருகிறது. காங்கிரஸ் கட்சியின் நிலை பரிதாபத்துக்குரியதாக உள்ளது.

மொத்தமுள்ள 70 தொகுதிகளில்   வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. காலை 11.30 மணி நிலவரப்படி,  பாஜக 42 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது.  ஆம்ஆத்மி 28 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளன.  காங்கிரஸ் கட்சி ஒரு இடத்திலும் முன்னிலை பெறவில்லை.

ஆத்ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவாலை விட அவரை எதிர்த்து போட்டியிட்ட பர்வேஷே சாகிப் சிங் முன்னிலை வகித்து வருகிறார். இருவரும் மாறி மாறி முன்னிலையில் இருந்து வருகின்றனர்.

ஆம் ஆத்மி கட்சியின் முதல்வர் வேட்பாளரான  அதிஷிக்கு எதிராக கல்காஜியில் இருந்து பாஜகவின் ரமேஷ் பிதுரி முன்னிலையில் இருந்து வருகிறார்.

ஓக்லாவில் ஆம் ஆத்மி கட்சியின் அமானதுல்லா கானை விட பா.ஜ.கவின் மணீஷ் சவுத்ரி முன்னிலை வகிக்கிறார்.

முஸ்தபாபாத்தில் ஆம் ஆத்மி கட்சியின்  வேட்பாளர் அடீல் அகமது கானைவிட  பாஜகவின் மோகன் சிங் பிஷ்ட் முன்னிலை வகிக்கிறார்.

திமார்பூரில் ஆம் ஆத்மி கட்சியின் சுரிந்தர் பால் சிங் பிட்டூ முன்னிலையில் தொடர்கிறார்.

கோண்ட்லி தொகுதியில்  ஆம் ஆத்மி கட்சியின் குல்தீப் குமார் முன்னிலையில் இருந்து வருகிறார்.

நங்லோய் ஜாட்டில் பாஜகவின் மனோஜ் குமார் ஷோக்கீன் முன்னிலை வகிக்கிறார்.

ஷகூர் பஸ்தியில் பாஜகவின் கர்னைல் சிங் முன்னிலை வகித்து வருகின்றார்.

 

70 தொகுதிகளைக் கொண்ட  டெல்லியில் ஆட்சியை பிடிக்க ஆம்ஆத்மி, காங்கிரஸ், பாரதிய ஜனதா கட்சிகளுக்கு இடையே மும்முணை போட்டி நடைபெற்று வருகிறது.  அங்கு பிப்ரவரி 5ந்தேதி அன்று காலை 8 மணிக்கு  வாக்குப்பதிவு  தொடங்கி மாலை 6 மணிக்கு முடிவடைந்ததது.  மொத்தமுள்ள 70 தொகுதிகளில்  762 வேட்பாளா்கள் களத்தில்  இருந்தனர்.

சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவுக்காக 13,750 வாக்குச்சாவடிகள் நிறுவப்பட்டிருந்தன.  தேர்தல்ல்  1.47 கோடி போ் இன்று வாக்களிக்க  தகுதியானவர்கள் என்றும்,  இவர்களில், ஆண்கள் – 81,05,236, பெண்கள்- 66,80,277, முதல் தலைமுறை – 2,32, 815, ராணுவத்தினா் – 11,608, மூன்றாம் பாலினித்தவா் – 869, மூத்த குடிமக்கள்- 2,04,830 (80 வயதுக்கு மேற்பட்டோா்) என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.

இந்த தேர்தலில், ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் சார்பில் தலா 70 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். பாஜக 68 வேட்பாளர்களை களத்தில் இறக்கியுள்ளது. அதன் கூட்டணி கட்சிகளான ஐக்கிய ஜனதா தளம் மற்றும் லோக் ஜனசக்தி கட்சி (ராம் விலாஸ்) சார்பில் இரண்டு வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

டெல்லியின் முன்னாள் முதலமைச்சர் அரவிந்த் கேஜ்ரிவால் புதுடெல்லி தொகுதியில் போட்டியிடுகிறார். அங்கு பலத்த போட்டி நிலவியது.  து. இத்தேர்தலில் 60.54% வாக்குகள் பதிவாகின. 2020-ம் ஆண்டு வாக்குப் பதிவை ஒப்பிடுகையில் 2.5% குறைவாகும். 50,42,988 ஆண் வாக்காளர்களும் 44,08,606 பெண் வாக்காளர்களும் வாக்களித்தனர். முஸ்தாபாத் பகுதியில்தான் மிக அதிகபட்சமாக 69.01% வாக்குகள் பதிவாகின. மெஹ்ரவுலி பகுதியில் குறைந்தபட்சமாக 53.02% வாக்குகள் பதிவாகி இருந்ததாக தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது.