பெங்களூரு

ர்நாடக உயர்நீதிமன்றம் நில மோசடி வழக்கு விசாரணையை சிபிஐ க்கு மாற்ற மறுப்பு தெரிவித்துள்ளது.

கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையாவின் மனைவி பார்வதிக்கு, மைசூரு நகர்ப்புற மேம்பாட்டு ஆணையம் (மூடா) 14 வீட்டுமனைகளை ஒதுக்கி இருந்தது.

இந்த.முடா வீட்டு மனைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டதில் முறைகேடு நடந்துள்ளதாகவும் இந்த விவகாரத்தில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் அம்மாநில ஆளுநரிடம் மனு அளித்தனர்.

இந்த வழக்கு விசாரணைக்குத் தடை கோரி கர்நாடக உயர்நீதிமன்றத்தில் சித்தராமையா வழக்கு தொடர்ந்தார். ஆனால் இந்த விசாரணைக்குத் தடை விதிக்க மறுத்த கர்நாடக உயர்நீதிமன்ற,ம், விசாரணையைத் தொடர்ந்து நடத்த அனுமதித்தது. இந்த வழக்கை லோக் அயுக்தா போலீஸ் விசாரித்து வருகின்றனர்.

இந்த வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும் என்ற ஆர்டிஐ ஆர்வலர் சினேகமாயி கிருஷ்ணா என்பவர் தாக்க ல் செய்த ரிட் மனுவினை கர்நாடக உயர்நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்துள்ளது.. . சித்தராமைய இந்த தீர்ப்பினை வரவேற்பதாக தெரிவித்துள்ளார்.

சமூக ஆர்வலரும், மனுதாரருமான கிருஷ்ணா, சிபிஐக்கு மாற்ற மறுத்த கர்நாடக ஐகோர்ட்டு தீர்ப்பினை எதிர்த்து உச்சநிதிமன்றத்தை நாட உள்ளதாக தெரிவித்துள்ளார்.