பிரயாக் ராஜ்
இஸ்லாமிய மதத்தை சேர்ந்த பீகார் மாநில ஆளுநர் ஆரிப் முகமது கான் மகா கும்பமேளாவில் பங்கேற்றுள்ளார்.

உலகின் மிகப்பெரிய ஆன்மிக சங்கமமாக திகழும் மகா கும்பமேளா உத்தரபிரதேசத்தின் பிரயாக்ராஜில் நடைபெற்று வருகிறது. iஇதையொட்டிஉலகம் முழுவதும் உள்ள இந்து மதத்தினர் பிரயாக்ராஜில் திரண்டு அங்குள்ள திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி வருகின்றனர்.
144 வருடங்களுக்கு ஒரு முறை நடக்கும் இந்த மகா கும்பமேளா கடந்த மாதம் 14ம் தேதி தொடங்கிய கும்பமேளா வரும் 26ம் தேதி வரை 45 நாட்கள் நடைபெறுகிறது. இந்நிகழ்வில் ஏராளமான அரசியல் பிரமுகர்கள் பங்கேற்று புனித நீராடி உள்ளனர்/0
நேற்று மகா கும்பமேளா நிகழ்ச்சியில் இஸ்லாமிய மதத்தை சேர்ந்த பீகார் கவர்னர் ஆரிப் முகமது கான் பங்கேற்று அவர் சீத்தானந்த் சரஸ்வதி என்ற சாமியாரை சந்தித்து ஆசிபெற்றுள்ளார்..
ஆளுநர் ஆரிப்முகமது கான், மகா இந்து யாத்திரையான இந்நிகழ்ச்சி, உலக அமைதி, ஒற்றுமை, சேவையின் கலங்கரை விளக்கமாக உள்ளதாக தெரிவித்துள்ளார்.