டெல்லி
உச்சநீதிமன்றத்தில் இரட்டை இலை வழக்கு குறித்த மேல் முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சூர்யமூர்த்தி என்பவர் இரட்டை இலை சின்னத்தை முடக்க வேண்டும் என்று தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவின் படி, இந்திய தேர்தல் ஆணையம் தொடர் விசாரணை நடத்தி வந்தது. எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம், மனுதாரர், கே.சி.பழனிசாமி, புகழேந்தி ஆகிய அனைத்து தரப்பினரும் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது.
அண்மையில் எடப்பாடி பழனிசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு கூடுதல் மனுவை தாக்கல் செய்து அதிமுக மற்றும் இரட்டை இலை சின்னம் தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் மனு கொடுத்துள்ள சூர்யமூர்த்தி என்பவர் அதிமுகவில் உறுப்பினர் கிடையாது எனத் தெரிவித்தார்.
மேலும் அதிமுகவில் உறுப்பினர் இல்லாத ஒருவர், கட்சி மற்றும் சின்னம் தொடர்பாக வழக்கை தொடர எந்தவித முகாந்திரம் இல்லை. எனவும்கட்சியின் அடிப்படை உறுப்பினராக இல்லாத ஒருவர், கட்சியின் உள் விவகாரங்கள் தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் மனு அளிக்க முடியாது ன்பதால் சூர்யமூர்த்தியின் மனுவை தேர்தல் ஆணையம் நிராகரிக்க வேண்டும் என்றும் கோரினார்.
இந்த வழக்கில் அதிமுக பொதுச்செயலாளர் பதவி தொடர்பாக விசாரணை நடத்த தேர்தல் ஆணையத்திற்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்ற, உத்தரவிட்டது. இந்த தடையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் எம்.ஜி.ராமச்சந்திரன் என்பவர் மேல்முறையீடு செய்தார். மனு சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் தீபாங்கர் தத்தா, மன்மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.
விசார்ணையின் போது இரட்டை இலை சின்னம் தொடர்பான மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி உத்தரவிட்டனர். சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்தவர் மனுவை திரும்பப் பெறுவதாக தெரிவித்ததால் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.