டெல்லி
கடும் பனி மூட்டம் காரணமாக டெல்லியில் 41 ரயில்கள் காலதாமதாக இயக்கப்படுகின்றன.

டெல்லியின் பல இடங்களிலும் அதிகாலை முதல் பனிமூட்டம் சூழ்ந்து தெளிவற்ற வானிலை காணப்படுவதால், வாகன போக்குவரத்து பாதிப்படைந்து ரயில்களின் சேவையிலும் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. நாட்டின் தலைநகர் டெல்லிக்கு பல்வேறு நகரங்களில் இருந்தும் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.,
இவ்வாறு டெல்லிக்கு, வந்து சேர வேண்டிய 41 ரயில்கள் காலதாமதத்துடன் இயக்கப்படுகின்றன எனஇந்திய ரெயில்வே நிர்வாகம் வெளியிட்ட தகவல் தெரிவிக்கின்றது.
இந்த ரயில்களில் புருஷோத்தம் எக்ஸ்பிரஸ், மகாபோதி எக்ஸ்பிரஸ், லிச்வி எக்ஸ்பிரஸ், தட்சிண எக்ஸ்பிரஸ், மால்வா எக்ஸ்பிரஸ், சம்பர்க் கிராந்தி எக்ஸ்பிரஸ் ஆகியன 3 மணிநேர காலதாமதத்துடனும் பூர்வா எக்ஸ்பிரஸ், வைஷாலி எக்ஸ்பிரஸ், பிரயாக்ராஜ் எக்ஸ்பிரஸ், சிரஞ்சீவி எக்ஸ்பிரஸ், காசி விஸ்வநாத் எக்ஸ்பிரஸ், பத்மாவதி எக்ஸ்பிரஸ், ஜி.டி. எக்ஸ்பிரஸ் ஆகியன 2 மணிநேர காலதாமதத்துடனும் இயக்கப்படுகின்றன.
கடந்த சில நாட்களாகவே டெல்லியில் கடும் பனிமூட்டம் மற்றும் தெளிவற்ற வானிலை ஆகியவற்றால் ரயில்களின் வருகையில் காலதாமதம் ஏற்பட்டு பயணிகள் தொடர்ந்து அவதியடைந்து வருவது குறிப்பிடத்தக்கதாகும்.