டெல்லி

த்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் டெல்லியில் காற்றின் தரம் மிகவும் மோசமான நிலைக்கு சென்ருள்ளதாக கூறி உள்ளத்.

உலகில் காற்றின் தரம் மோசமாக உள்ள நகரங்களில் தலைநகர் டெல்லியும் உள்ள்து.  இங்கு காற்றின் மாசை தடுக்க மத்திய மாநில அரசுகள் பல நடவடிக்கைகல் எடுத்து வருகின்றன.   ஆனால் இதனால் எவ்வித பலனும் இல்லை எனவே கூறப்படுகிறது.

கடந்த சில நாட்களாக தலைநகர் டெல்லியில் காற்றின் தரம் மிகவும் மோசமான நிலைக்கு சென்றுள்ளது. மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியமும் காற்று மாசு மிகவும் மோசமான நிலைக்கு சென்றுள்ளதாக தெரிவித்துள்ளது.

குறிப்பாக  ஆனந்த் விஹார், விவேக் விஹார், ஜஹங்கீர்பூர், சோனியா விஹார் உள்பட பல்வேறு பகுதிகளில் காற்றின் தரம் மிகவும் மோசமான நிலையில் உள்ளதால் மக்கள் மூச்சுவிடுவதில் கூட சிரமம் ஏற்பட்டுள்ளது.

தற்போதே டெல்லியில் காற்றின் தரம் மிகவும் மோசமான நிலைக்கு சென்றுள்ள நிலையில் தீபாவளி நெருக்கி கருகின்றது.  டெல்லியில் தீபாவளியன்று பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளபோது தடையை மீறி சிலர் பட்டாசு விதிக்கலாம் என்பது. மகக்ளுக்கு அச்சத்தை உண்டாக்கி உள்ளது.