டெல்லி

காவல்துறையினர் டெல்லி விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவரை கைது செய்துள்ளனர்.

கடந்த சில நாட்களாக இந்தியாவில் இருந்து உள்நாடு, வெளிநாடுகளுக்கு செல்லும் விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் வருகின்றன அதிலும் கடந்த 12 நட்களில் 275 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

இந்த மிரட்டல்களைத் தொடர்ந்து விமானங்கள் தரையிறக்கப்பட்டு நடத்தப்படும் சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது தெரியவந்துள்ளது. பொதுவாக சமூகவலைதள பக்கங்கள் மூலம் இந்த மிரட்டல் சம்பவங்கள் அரங்கேறி வருகிறன.

நேற்று முன்தினம் இரவு டெல்லி விமான நிலையத்திற்கு சமூகவலைதளம் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதையடுத்து விமான நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட தீவிர சோதனையில் மிரட்டல் போலி என்பது தெரியவந்தது.

டெல்லி காவ்வல்துறையினர் விசாரணை மேற்கொண்டு டெல்லி விமான நிலையத்திற்கு மிரட்டல் விடுத்த டெல்லியின் உத்தம் நகர் பகுதியை சேர்ந்த ஷியாம் உபத்யா (வயது 25) என்ற இளைஞரை கைது செய்தனர்.

உபத்யா சமீபத்தில் விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்து கொண்டிருக்கும் நிலையில் தனது பெயர் தேசிய அளவில் கவனம் பெற வேண்டும் என எண்ணி டெல்லி விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார். காவதுறையினர் உபத்யாவை சிறையில் அடைத்து, இச்சம்பவம் தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.