கமதாபாத்

ட்டவிரோதமாக குஜராத்தில் தங்கி இருந்த 48 வங்க தேசத்தவர் கைது செய்யப்ப்பட்டுள்ளனர்.

காவல் துறையினருக்கூ குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் வங்கதேச நாட்டைச் சேர்ந்தவர்கள் சிலர் சட்டவிரோதமாக தங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது. காவல்துறையினர் இதன் அடிப்படையில் பல்வேறு இடங்களில் தீவிர சோதனை மேற்கொண்டனர்.

அப்போது அகமதாபாத்தில் தங்கியிருந்த வங்கதேச நாட்டைச் சேர்ந்த 250 பேருக்கும் மேற்பட்டவர்களிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் 48 பேர் உரிய ஆவணங்கள் இல்லாமல் வங்கதேசத்தில் இருந்து இந்தியாவிற்கு வந்து சட்டவிரோதமாக குடியேறி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

ஒரு சிலர் 10 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவில் தங்கியிருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த 48 பேரையும் கைது செய்த காவல்துறையினர் அவர்களை வங்கதேசத்திற்கு திருப்பி அனுப்பும் பணிகளை மேற்கொள்ள உள்ளதாக தெரிவித்துள்ளனர்.